பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

83


பணம் தேடும் இலட்சியத்தை முதலில் கொள்வோம்.

2. எண்ணமும் திண்ணமும்

நமது வாழ்க்கையின் இலட்சியம் முதலில் பணம். பிறகு புகழ்.

ஏழைக்குரிய புகழ் அவனை மற்றவர்களின் ஏளனத்திற்கு ஆளாக்கிவிடும். தமிழகத்தில் தலைசிறந்த கவிஞர் என்று போற்றப்படும் ஒருவர், ஏழை. புகழ் இருக்கும் அளவுக்குப் பொருள் வசதி இல்லாதவர். அவரால் கார் வாங்க முடியவில்லை. வெளியிலே போக ‘டாக்சியும்’ வைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் பஸ்ஸில் போகிறார். பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறார். அவரைப் பார்க்கிறவர்கள். ‘ஐயோ பாவம்’ என்று அனுதாபப்படுகிறார்கள். அவரது அறிவும், ஞானமும், புகழும் பெருமையும் அவரை கெளரவிக்கவில்லையே! ஏன்? ஏனென்றால், புகழுக்கேற்றபடி, அவர் சில ‘பந்தாக்களை’ செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காகக் கொஞ்சம் பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு சில பணக்காரத் தனங்களை செய்யும் பொழுதுதான் சமுதாயம் சம்மதிக்கிறது. சிறப்பாக சேர்த்துக் கொள்கிறது சரித்திரக் கதாநாயகனாக சித்தரித்துப் போற்றுகிறது.

பணமும் புகழும் நாம் விரும்பியவுடனேயே வந்து சேர்ந்து விடுவதில்லை.