பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அண்ணா தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்றுக் கொண்ட நேரத்திலே இந்த மன்றத் திலே நிதிநிலை அறிக்கையை வைத்துவிட்டுப் பதிலுரை பகர் கின்ற நேரத்தில், அண்ணா அவர்கள் சொன்னார்கள், என் னுடைய அரசு தமிழகத்தில் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்கள், பின் தங்கிய மக்கள், நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள்- அவர்களுடைய வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டும் என்று சொன்னார்கள். தமிழ் தழைக்க, தமிழ்க்குலம் செழிக்க, என் அரசு பாடுபடும் என்று எடுத்துச் காட்டினார்கள். அவர் காட்டிய வழியில் நின்று நாங்கள் பணியாற்றுகிறோமா. இல்லையா? சென்னை இராஜ்யம் என்ற பெயர் அண்ணா அவர்கள் காலத்தில் தமிழ்நாடு என்று தனக்கே உரிய பெயரைப் பெற்றது. இந்த மாமன்றமே அன்றைக்கு மகிழ்ச்சிக் கடலில் ஆழ, இன்றைக்கு மைசூர் மாநிலத்தவர்களு நம் வழியைப் பின்பற்றுகிறது, அன்றைக்கே சென்னை ராஜ் யம் என்ற பெயர் மாற்றப்பட்டு நாம் பிறந்த மண்ணுக்குத் தமிழ்நாடு என்கிற பழைய பெயர், நம்முடைய இலக்கி யங்களில் காணப்படுகின்ற பெயர், நம் உரிமையைக் கின்ற பெயர் சூட்டப்பட்டது. காக் 1937- ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ முப்பது, முப்பத் தைந்து ஆண்டுக்காலமாக நடைபெற்று வந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு முடிவு காணுகின்ற வகை யில் அண்ணன் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில்-இன்று மட்டுமன்றி, இனிமேல் தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டுக்குத்தான் இடம், தமிழ் நாட்டுப் பள்ளிக்கூடங்களில் இந்தி மொழிக்கு இடமில்லை என்கிற தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றிய தும் இதே மன்றத்தில்தான்; திராவிட முன்னேற்றக் கழிக ஆட்சியில்தான் என்பதை மறந்துவிட முடியாது. சுயமரியாதைத் திருமணம் என்கிற சமுதாயச் சீர்திருத்தத் திருமணங்களைச் சட்டப்படி செல்லுபடியாகத் தக்கதாகச் செய்ய வேண்டும் என்பதாக எதிர்வரிசையில் இருந்து நாங்கள் கூறி வாதிட்டுவந்த நேரத்தில் எல்லாம் அப்போதிருந்த ஆட்சியாளர்களால் அது புறக்கணிக்கப் பட்டது. நாங்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பி றகுதான் அண்ணன் அவர்கள் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற புரட்சிகரமான