பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ரெய்டு; பெரிய சோதனை: 20 லட்சம் எடுத்து விட்டார் கள் என்ற செய்தி வருகிறது. இப்படி நான் டெல்லியிலே இருக்கின்றவர்களை இந்த நேரத்தில் குற்றம் சாட்ட விரும்ப வில்லை. கீழே இருக்கின்ற குட்டித் தேவதைகள், அந்தத் தேவதைகளைப் பிடித்து ஆட்டிப்படைக்கின்ற தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய சில .ே தேவதை கள் இந்தக் காரியத்தில் ஈடுபடுகிறார்கள். 4, 5 நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் செயலாளர் ராஜமாணிக்கம் அவர்களுடைய வீட்டில் வருமானவரி அதிகாரிகள் தீடீரெனப் பிரவேசித் தார்கள். அரங்கண்ணல் வீட்டில் இன்கம்டாக்ஸ் அதிகாரி கள் எடுத்த தொகை வெறும் 60 ரூபாய். ராஜமாணிக்கம் வீட்டில் சென்று அவர்கள் சோதனை நடத்தினார்கள். அங்கே ஆயிரம் ரூபாய்க்கு நகைகள் இருந்தன. அந்த ராஜமாணிக்கம் அவர்கள் இன்று, நேற்றல்ல; பல ஆண்டுக் காலமாகக் கோயம்புத்தூரில் திராவிட முன்னேற்றக் கழ சுத்தை வளர்த்து வருகின்றவர். இன்னும் சொல்லப் போனால் சிங்கா நல்லூரில் 40 ரூபாய் வாடகைக்கு நான் ஒரு வீட்டில் குடியிருந்துகொண்டு, அரிசிக்குக் கஷ்டப்படு கின்ற நேரத்தில், என்னுடைய வீட்டிற்கு அரிசி கொண்டு வந்து கொடுத்து என்னுடைய வீட்டில் பொங்க வைக் கின்ற அளவுக்கு அன்றைய தினம் வசதி படைத்திருந்தவர். ஒரு கடையில் குமாஸ்தாவாகப் பணியாற்றிச் சம்பாதித்தார். அவருக்கு, அவருடைய கழகப் பணியைக் கெளரவிப்பதற்காக கோவை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தார் நிதி வசூல் செய்து, என்னை அழைத்து 40 ஆயிரம், 45 ஆயிரம் நேற்று சுக்கன் அவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்களே - அதைப்போல், அன்றைக்கு ராஜ மாணிக்கத்திற்கு 45 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து ஒரு வீடு வாங்கித் தந்தோம். அந்த வீட்டிற்கு வாங்கிய பத்திரம் அவருடைய வீட்டில் இருந்திருக்கிறது. அதைப் பற்றி பஞ்சன் லாமாவோ, தலைலாமாவோ; அந்தப் பஞ்சன் லாமா பத்திரத்தை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். 47 ஆயிரம் ரூபாய் பத்திரம், ஆயிரம் ரூபாய் பணம் இதைக் கைப்பற்ற வில்லை. கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள். ஆக இப்படி முன்னேற்றக் கழகத்திலே யார், யார், எங்கெங்கே தூண்களாக இருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் மிரட்டு வது என்ற அளவுக்கு வருமான வரி இலாகா அவர்களுடைய கையிலிருக்கிறது என்கின்ற காரணத்தால், என்போர்ஸ் மெண்ட் தங்கள் கையில் இருக்கிறது என்ற காரணத்தி னாலும், இன்றைக்குச் சில பேரைப் பணிய வைக்கலாம் என்று கருதியிருக்கிறார்கள், அவர்கள் தேடிப் பார்த்துப் பணத்தைக் கைப்பற்ற வேண்டிய இடங்கள் தமி ழகத்திலே ஏராளமாக இருக்கின்றன. அங்கேயெல்லாம் என்ன செய்கிறார்கள் தெரியுமா? சமரசம் பேசிக் கொள் கிறார்கள். கட்சியிலிருந்து வெளியே விடுகிறோம். வருகிறாயா, விட்டு கட்சியை இரண்டாக ஆக்குகிறாயா, வ விட்டு