பக்கம்:நம் நேரு.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு

39


இந்தியாவில் அரசியல் விழிப்பு ஏற்பட்டிருந்த ஆரம்ப நாட்களில் பேசுவதுதான் பெரிய சேவையாக மதிக்கவிட்டது. செயல் திட்டமிட்டு எந்தத் தலைவரும் நல்ல வழிகாட்ட வில்லை. டாக்டர் சாப்ருவும், பண்டித மதன் மோகன மாளவியாவும் நாட்டு விடுதலைக்கு உரிய வழிகாட்டக் கூடும், காட்ட வேண்டும் என்று நேரு ஆசைப்பட்டார். அவர்களிடம் பேசி அவர்களைச் செயல் பாதையில் அடியெடுத்து வைக்கும்படி ஜவஹர் தூண்டி கொண்டிருந்தார்.

மகனின் செயலைக் கவனித்து வந்த தந்தையின் உள்ளத்தில் கவலே படிந்தது. ஜவஹர் ஓயாது குறை கூறிக்கொண்டிருந்ததும், பேச்சு மட்டும் போதாது, செயல் திட்டங்கள் வேண்டும் என்று தலைவர்களைத் தூண்டி வந்ததும் சேர்ந்து "அவர் தீவிரவாதியாகி விட்டார். வங்காளத்தில் வாழ்ந்த பலாத்காரவாதிகளின் வழியைத் தான் நேருவும் பின்பற்றுகிறார் போலும்” என்ற எண்ணத்தையே உண்டாக்கின.

"செயல் புரிய வேண்டும். செயல் திட்டம் வேண்டும்” என்று ஜவஹர்லால் துடித்தாரே தவிர, என்ன காரியத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்ற தெளிவு அவருக்கும் இருந்ததிலை தான், வங்கத்து இளைஞர்களின் பலாத்காரப் போக்கு நேருவுக்குப் பிடிக்கவில்லை. அவர்களது நடவடிக்கைகள் அவருக்குப் பெருத்த கவலையைத் தான் கொடுத்து வந்தன. மந்தமாக அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டு காலத்தை ஓட்டுகிற மிதவாதமும் அவருக்கு எரிச்சல் ஊட்டியது. ஆனாள் அன்றையச் சூழ்நிலையில் வேறு எதுவும் செய்யமுடியாது என்றும் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/42&oldid=1366191" இலிருந்து மீள்விக்கப்பட்டது