பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;

t

92

ஈடு இணையற்ற கடவுளே, தெய்வீக ஆற்றல்களின் நலம் பயக்கும் மெய்யறிவைப் பாராட்டும் பண்பை எங்களுக்களிப்பாய், - நாங்களும் அவற்றின் பண்பு நலன்களை அடையட்டும். அவற்றின் பரந்த மனப்பான்மையையும், அன்பு கலந்த நெகிழ்வையும் நாங்களும் பெறுவோமாக. அவற்றின் பெருந்தன்மைச் சிறப்பையும், அமைதித் தன்மையையும் அடையும் வகையில் நீண்ட அகவையை எங்களுக்கு அருள்வாய், - அவற்றைப் போல் நாங்களும் அன்பும், அமைதியையும் பெற்று நிறைவோடு வாழ உதவி புரிவாய். (இருக் 1)

மெய்யறிவொளி கொண்ட உயர்ந்த ஆன்மாக்களே, நல்லவற்றைக் காதுகள் கேட்கட்டும். - நல்லவற்றைக் கண்கள் கண்டு, பகவான் அளித்துள்ள வாழ்நாள் காலத்தை நன்கு நுகர்வோமாக. எங்களுடைய உடலுறுப்புகள் உறுதிகொண்டு விளங்கட்டும். உடல் நலம் பெற்று இருக்கட்டும். பேரிறைக்குப் பணி செய்து மனம் நிறைவு பெறட்டும்.

w (இருக் 1)

தனக்கு உவமையில்லாத சீர்த்திபெற்ற பேரின்பத் தலைவ, உனது புகழ், வானுலகிலும் நிலவுலகிலும், மலைகளிலும்

நற்றமிழில் நால் வேதம்