பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

செடி கொடி மர இனங்களிலும் நீரிலும் பரந்துள்ளது எங்களிடம் கருணை காட்டி எங்கள் பணிவன்பை ஏற்றுக் கொள்வாய். (இருக் 1)

நற்பண்புகளின் உறைவிடமே, பெருந்தகையே, எங்கள்மேல் அருள் பாலிப்பாய். உன்னைப் போற்றி வழுத்தாதவர் எவருமில்லை, வாழ்முதலாகிய வள்ளலே - எங்கள் முயற்சிகள் யாவற்றிலும் உறுதுணையாக இரு. (இருக் 7)

இறைவன் ஏற்படுத்திய நெறிமுறைகளின் இருப்பிடமாக விளங்குகிறவையும், எங்கும் நிறைந்திருக்கிறவையும், போற்றுதலுக்கு உரியவையுமான தெய்வீக ஆற்றல்களே, வீரமிக்க குழந்தைகளுட்பட அனைத்துச் செல்வங்களும் எங்களுக்கு அருள்வாயாக. உயர்ந்த வினைத்திறன் புரியும் ஆற்றலை எங்களுக்கு அளிப்பாயாக. (இருக் 10)

இறையே, கேட்காமலேயே வாரி வழங்கும் வள்ளல் நீ. வாழ்த்துக்கூறி எங்கள் மீது உன் - அன்பு மழையைப் பொழிவாய். மனமார உன்னைத் துதி செய்தாலே போதும். எங்கள் குறைகளை மறந்து மன்னித்து எங்களுக்கு அருள் பாவிப்பாய் நீ, பெருமானே, எங்களை வாழ்த்தியருள்வாய். (இருக் 1)

த.கோ - தி.யூரீ