பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ছু" 104

t

மன்னிப்பு

எங்கள் வாழ்க்கைச் சிக்கல்களில் அமிழ்ந்து போய் தெய்வ ஆற்றல்களுக்கெதிராக தீவினைகள் புரிந்திருக்கிறோம். இதை மாந்தர்கள், பெரியோர்கள், இவர்களுக்கு எதிராகவும், மனச்சான்றுக்கு விரோதமாகவும் பாவங்கள் புரிந்திருக்கிறோம். தவிர,தெரிந்தும், தெரியாமலும், எத்தனையோ தீவினைகள் புரிந்திருக்கிறோம். எங்களை மன்னித்துவிடு, தலைவ! (யசுர் 8)

நெசவாளி நெய்த நூலை எலிகள் அறுத்திடுவதுபோல், கவலைகள் என் உள்ளத்தை அரித்தெடுக்கின்றன. உன் அன்பனுக்கு அருள்புரிவாய். (இருக் 10)

கடவுளே, பரந்த வையகத்தின் பேரிறையே, எங்களுடைய கண்கள் நெஞ்சம், மனம் இவற்றிலுள்ள குறைகளைக் களைந்தெறிய எங்களுக்கு உதவி புரிந்திடுவாய்,

நற்றமிழில் நால் வேதம்