பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 11

பேரொளிச் சுடரே, பயனற்ற குப்பைக் கூளங்களை எரித்தழிப்பது போல் என்னிடமிருக்கும் தீயகுணங்களை உனது தீச்சுடரினால் சுட்டெரித்து விடுவாய். (இருக் 7)

தலைவ, உன்னிடமுள்ள அச்சத்தினால் இருண்ட தீ கொடுமைகள் யாவும் - கட்டுப்பாட்டில் இருக்கின்றன. போற்றுதற்குரிய பொருளே, மக்கள் யாவர் மேலும் உன் ஒளியைப் பரப்பி அவர்களுடைய தீய ஒழுக்கங்களின் வேரையே எரித்து விடுவாய். (இருக் 7)

இறைஅருள் பெற்ற உலகியலான, ஆன்மிக உலக வலிமைகளே, - எங்களுக் கெதிராக திட்டம் தீட்டுபவர்களை அழித்திடுங்கள்.

புலால் உண்ணும் மத நம்பிக்கையற்ற கொடியவர்களுக்கு எதிராக உன் வலிமையைக் காட்டிடுவாய். (இருக் 7)

தீயவர்கள் எல்லையற்ற இருட்டில் அழுந்தட்டும். ஒருவர் கூட மீளமுடியாத நிலை அவர்களுக்கு ஏற்படட்டும். நல்ல மாந்தர்கள் நன்கு வாழ வேண்டும் என்கிற உயிரார்வமே - - எனது இந்தச் சீற்றத்திற்குக் காரணம். (இருக் 7)

த.கோ - தி.பூநீ لنجيلا