பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;

k

130

அறிவொளி மிக்கவர்களான முனிவர்கள் விரும்பும் நிறைந்த ஈறில்லாத மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் நல் வழியில் நடப்பாய். (அதர் 8)

நிறைந்த ஈறில்லா மகிழ்ச்சியிலேயே கடவுள் நம்மை எப்பொழுதும் வைத்திருக்கிறான் என்று புரிந்து கொள்ளும் உணர்வினை அளிப்பாய். எங்களுடைய ஆசைகள் யாவும் நிறைவேற வழி செய்திடுவாய். (யசுர் 4)

என்றும் என்னருகிலேயே நீ இருப்பது ஒன்றே எங்கள் நிலையான ஆசைகள் நிறைவேறும் என்பதன் அறிகுறி என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வாழ்த்துக் கூறுவாய்.

- - (ய்சுர் 5)

முக்கால ധ്രുതം மகிழ்ச்சி பெற்றிருப்பதே வாழ்க்கைப் பயணத்தின் இறுதிக் குறிக்கோள். (யசுர் 7)

இயல்பிலேயே இறை சால்புடையவரே, அவனின் மேன்மைக் குணங்களில் பங்கெடுத்துக் கொள்வீர். பெரு மகிழ்ச்சியின் எல்லையை எட்டிப் பிடிப்பீர்.

(யசுர் 9)

இறையின் பேரருளைப் பெற, மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கித் திளைத்து அவனுட்ைய திருவடிகளில் நமது உடமைகள் யாவற்றையும் ஒப்படைப்போம்.

(யசுர் 11)

நற்றமிழில் நால் வேதம்