பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

விரும்புகிற பொருள்களெல்லாம் கிடைக்குமிடம், எண்ணுகிற எண்ணங்களெல்லாம் நிறைவேறுமிடம் அது. ஒ, மனமே, ஓடோடிச் சென்று நிலையான பேரின்பத்தின் பிறப்பிடத்தை அடைந்திடுவோம்.

(இருக் 9)

மண்ணகமே மாந்தனின் விண்ணகம். நாம் வாழும் உலகமே மற்றயாவற்றையும் விட நமது மனத்துக்கு உகந்தது. இயற்கையின் அருள் வளங்களெல்லாம் செழித்துக் கொழித்து நிறைந்தது அது.

மகிழ்ச்சியுடன் இரு. உனக்கு வகுத்திருக்கும் வாழ்நாள் காலத்திற்குமுன் மாண்டு விடாதே.

பிறந்தனவெல்லாம் ஒருநாள் இறக்கவேண்டியவையே என்பதை நினைவில் கொள். ஆனால், உன் காலம் முடியுமுன் ஆயிரம் தடவை இறந்து விடாதே. (அதர் 5)

அச்சம் அடையாதே மனிதர்கள், பறவைகள், விலங்கினங்கள் யாவையுமே இறப்புக்குட்பட்டவை. ஆயினும் உன்னை நான் சாவின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறேன்.

பயப்படாதே மனிதா, என்னை நம்பு

நீ இறக்கமாட்டாய், . உனக்கு மனச்சோர்வில்லை. (அதர் 8) é

令 இறப்பே, இறைபக்தி உடையவர்கள் செல்லும் 響

நெறியிலிருந்து விலகி உனது

த.கோ - தி.நீ