பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

கரை சேர்தல்

உன்னுடைய கடமையைச் செய், பயனை இறைவனிடம் விட்டுவிடு. அவனது தீர்ப்பில் முழுமையான நம்பிக்கை வைத்திடு. எரிதிடை, பகை, பூசல்களினால் சின்னா பின்னப், படுத்தப் படுகிறது வாழ்க்கை. வாழ்க்கைப் போராட்டமாகிய இந்த இருண்ட எழுச்சி மிக்க நீர்ச் சுழலில், இறைவன் ஒருவனே துன்பங்கள் நிறைந்த பேராழியிலிருந்து நம்மைக் கரை சேர்க்க வல்லவன். அவன் ஒருவனே நாவாயின் தலைவனாயிருந்து, இறை இன்பமாகிற கரையில் சேர்க்கும் ஆற்றல் பெற்றவன். அவன் தலையசைப்பில் கொந்தளிக்கும் கடலலைகள் அமைதியடைகின்றன. ஆகவே உனது எண்ணங்களையும், ஆசைகளையும் முழு. நம்பிக்கையுடன் இறைவனுக்கு ஈந்துவந்திடு. அவன் தனது அருளன்பினால் உனக்கு நேரிடும் இடையூறுகளை அகற்றி அருள்புரிவான்.

(இருக் 8)

GKÒ G}#9