பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

உயர்ந்த, நேர்மையான காரணங்களுக்காகப் போராட நீ திறம் பெறுவாய். வேறுபட்ட குணம் கொண்ட வீரமுள்ள போராளிகளுடன் தொடர்புள்ள நீயும் வலுவான படைகளைக் கையிலெடுத்துக் கொள். எதிரிகளுக்கு என்றும் பணிந்துவிடாதே. உயர்ந்த நோக்கத்தை ஆதரிப்பதில் உனது துணிவு ஓங்கி உயர்ந்து நிற்கட்டும். உன் உள்ளத்தில் மறைந்திருக்கும் பெருமையைத் தட்டி எழுப்பி, வழி தவறி அலைந்து திரியும் மக்களுக்குத் தலைமை வகித்து வழிகாட்டிடு. (இருக்)

உங்களில் எவரொருவரும் புறக்கணிக்கக் கூடியவர் அல்லர். ஒருவர் கூட வல்லமையற்ற சிறு குழந்தை இல்லை. நீங்கள் யாவரும் உண்மையிலேயே உயர்ந்தவர்கள்.

(இருக்)

எங்கு மக்களனைவரும் ஒன்றுபட்டு ஒரே நம்பிக்கையுடன் இறைவனை வழிபடுகிறார்களோ அந்த மக்களினத்தினர் மேல் எல்லாம் வல்ல இறைவன் அன்புகொண்டு அருள் மாரி பொழிகிறான். (இருக்)

ஒ. மாந்தனே, உன் வாழ்க்கை முறையில் ஒழுங்கு இருக்கட்டும். இயற்கை அன்னை அளித்திடும் உணவு, நீர் ஆகியவற்றில் உங்கள் யாவருக்கும் சம பங்கு இருக்கட்டும்.

த.கோ - தி.யூரீ