பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

t

፭፥ሾxጅ« 236

விழிப்புணர்வு

தெய்வீக மக்களே, விழித்தெழுங்கள், விழித்தெழுங்கள். விழித்திருப்பவன் தலைவன்,"சோமா" வால் வாழ்த்தப்படுகிறான். விழிப்புடன் இருப்பவன் மட்டுமே இறை ஆற்றல்களின் நட்பைப் பெறுகிறான். அவன் ஈடுபடும் உயர்ந்த செயல்கள் யாவற்றிலும் கடவுள் அவனுடைய வெற்றிக்கு உறுதி அளிக்கிறான். தெம்புடனும், ஊக்கத்துடனும் கடினமாக உழைப்பவர்களுக்கு மட்டுமே கடவுள் துணை புரிகின்றான். சுறுசுறுப்பில்லாமல் தூங்கி விழும் மனிதர்கள் இறைவனின் நட்புக்கு உகந்தவர்கள் அல்லர். வினைப்பயனில் நம்பிக்கை கொண்டு செயலற்றிருப்பவனின் உதவிக்கு எவரும் செல்ல மாட்டார்கள். (இருக் 5)

ஒ. மனிதனே, தன்னிறைவுடன் இரு. பிறர் உதவிக்கு அடிமையாகி விடாதே. (யசுர் 6)

நற்றமிழில் நால் வேதம்