பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

செம்மாந்த மன அமைதி

உன் நீண்ட பயணத்தின் முடிவை நீ நெருங்கி விட்டாய். ஆகவே பூசல்கள், மோதல்கள், போராட்டங்கள்

இவற்றிலிருந்து ஒதுங்கிவிடு. மண்ணும், விண்ணும் உன்னிடக்க அருளிரக்கம் காட்டட்டும். உன் நெஞ்சத்தில் எவரிடத்தும்

பகைமை உணர்ச்சியை வைத்துக் கொள்ளாதே.

எவருக்கும் நீ அஞ்ச வேண்டியதில்லை.

எஞ்சிய காலத்தைக் கவலையற்ற நிலையில் கழித்திடுவாய்.

(அதர் 19)