இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
g" 252
கட்டளைகள்
மனிதனாக நீ செய்ய வேண்டிய கடமைகளை மறக்கும்
அளவுக்கு உன் ஆன்மாவின் சிறகுகள் அத்தனை
உயரத்திற்கு உன்னை இட்டுச் செல்ல வேண்டா.
(யசுர் 5)
ஓ, மனிதா, வாழ்க்கையின் கீழ் மட்டத்திலிருந்து எம்பி உயர் தளத்திற்கு உயர்ந்திடு. - இருண்மைக் குழியில் அழுந்திடாதே. உன்னைப் பிணைத்திருக்கும் தளைகளை உதறித் தள்ளிவிடு. இறப்பச்சம் உன்னை அழுந்திவிடக் கூடாது. உலக வாழ்க்கையில் வெறுப்படைந்திடாதே கொழுத்துவிட்டெரியும் தீயின் நாக்குகளைப்போல் ஒளிர்த்திடுவாய், செங்கதிர் போல் களிப்பொளி வீசிடுவாய். (அதர் 12)
நற்றமிழில் நால் வேதம் سسة