பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26O

மெய்யுணர்வு

தேடித் திரியும் முதலும் முடிவுமற்ற பொருளை உனது ஆன்மாவில் காண்பாய். உனது தேடுதலில் நெடுங்காலம் அலைந்து திரிந்து விட்டாய். அறியாமையில் உழன்றும், உதவியற்ற நிலையில் தவித்தும் உனது தேடுதலில் நீ கழித்த நாள்கள் எத்தனை சோர்வையும் துயரையும் தந்தனவோ? முடிவில் உன் பார்வையை உள் முகமாய் திருப்பும்போது, நம்பிக்கையின் சுடரையும், நிலைத்திருக்கும் ஆற்றலையும் உன்னைச் சுற்றிலுமே ஒளிவட்டமிட்டுக் கொண்டிருக்கக் காண்கிறாய். - உலகத்தின் ஆன்மாவை, நீ தேடி அலையும் பொருளை பெரு மகிழ்ச்சியுடன் காண்கிறாய். இறுதியில் நீ அடையவிரும்பும் பொருளை உனது துருவி ஆராயும் மனம், உனது உள்ளத்திலேயே உறைந்திருப்பதைக் காண்கிறது. இந்தப் புதிய புரிதல் உன் உள்ளத்தில் புத்தொளி பரப்புகிறது. (யசுர் 11)

நற்றமிழில் நால் வேதம்