பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

际举响K 282

உண்மையிலேயே, பரிவுள்ள ஞாயிறு எல்லோராலும் போற்றப்படுகிறான்.

jo காரணம் அவன் பெரும் செல்வன். அன்புடன் அதை

மற்றவர்களுக்கிடையே பகிர்ந்தளிப்பவன். (இருக் 7)

விலைமதிக்க முடியாத செல்வத்தை உடையவனும் விண்ணகத்தைத் தன் ஒளியினால் நிறைப்பவனுமான செங்கதிர்த் தேவன் தன் ஒளிக் கோடுகளினால் தாங்கப்பட்டுச் செல்வம் கொழிக்கும்படி நாம் விளக்க நம்மை வாழ்த்தட்டும். இருள் சூழும்போது அவன் அனைவரையும் உறங்க வைக்கிறான். அதேபோல், பொழுது விடிகையில், அவர்களை எழுப்பி விடுகிறான். (இருக் 7)

விரிந்து பரந்துள்ள ஞாயிற்றின் ப்ொன்மயமான தோள்கள் விசும்பின் உச்சத்தை எட்டட்டும். ஒளிவீசும் ஞாயிறு நமது உளளுயிர்களுக்கு வலிமை ஊட்டட்டும்.

(இருக் 7)

ஆற்றல் படைத்த செல்வத்திற்கு அதிகாரியான செஞ்சுடர்த் தேவன் நம் மீது செல்வங்களைப் பொழியட்டும் ஒளிபரப்பும் அவன் நம் யாவருக்கும் ஊட்டமளிக்கட்டும் (இருக் 7)

நற்றமிழில் நால் வேதம்