பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.14

ஏருழுதல்

விளைநில ஆண்டையே, உன்னோடு நாங்களும் ஒரு நண்பனைப் போன்று, எங்கள் பசுக்களுக்கும், குதிரைகளுக்கும் ஊட்டம் அளிக்கும் உணவைப் பெறுகிறோம்.

இந்த வகையில் இறை நம்மிடம் பெருந்தன்மையாய் இருக்கட்டும். (இருக் 4)

விளை நிலத்தின் தலைவ, பசு பாலளிப்பதுபோல், மலர்கள் தேனை அளிப்பதுபோல், வெண்ணையைப் போன்று தூயதாகவுள்ள தித்திப்பான ஒரு நீரோடையை எங்களுக்கு அளிப்பாய். புனிதமான அறத்தின் தலைவர்கள் நமக்கு அருள் வழங்கட்டும். (இருக் 4)

மூலிகைகள் எங்களுக்கும், தண்ணீருக்கும் இனிப்பளிக்கட்டும். நடுவானக் காற்றுத் தேனாயிருக்கட்டும்.

நற்றமிழில் நால் வேதம்