பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;

t

33O

ஒரே மூலம்

முதல் வைகறைக் காலைப் பொழுது தோன்றிய காலத்தில், என்றும் நிலைத்திருக்கும் தன்மை ஒளியின் பாதையில் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டது. இனிக், கடவுளர்களின் சிலைகள் வணங்கப்படும். பேரண்ட ஆற்றல்களின் ஆதிமுதல் சிறப்புடைய பெருமை மிக்கது. (இருக்3)

கடவுளர்களோ, சீரான பாதை தெரிந்துணர்ந்த முன்னோர்களோ, இரு பழையகால வீடுகளுக்கிடையே உள்ள அடையாளமோ நம்மை தவறான பாதையில் செல்லுவதைத் தடுத்து நிறுத்துமாக. பேரண்ட ஆற்றல்களின் ஆதிமுதல் சிறப்புடைய பெருமை மிக்கது. (இருக் 3)

எனது ஆசைகள் பல்வேறு இடங்களுக்குப் பறந்து செல்கின்றன. பழங்கால வேள்விகளுக்கு நான் ஒளியூட்டுகிறேன்.

நற்றமிழில் நால் வேதம்