பக்கம்:நற்றிணை-2.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 நற்றிணை தெளிவுரை ஆடுகளை மேய்ப்போளுகிய இடையன் அவற்றைத் தன் தலையிலே சூடிக் கொள்வான். அவ்விடத்தாகிய அகன்ற உள்ளிடங்கொண்ட மனைகளையுடைய சிற்றுாரிடத்தே வாழ்ந் திருப்பவர் யாம். அங்ங்னம் வாழ்வதொன்றுமே எம் விருப் பத்திற்குப் பொருந்துவதாயிருக்கும். அல்லாமலும், எம்மை இவ்விடத்தேயே தனித்து இருக்குமாறு நீர்தாம் பிரியக் கருதுவீராயின், நுமக்கு ஒன்றைச் சொல்லுகேன். ஆயமும் தாயருமாகிய எம் பிறந்தகத்துச் சூழலினின்றும் வேறு படுத்தி எம்மைக் கொணர்ந்து, நுமது இல்லத்தின் கண்ணே இருக்கச் செய்த பொழுதிலே, யாமும் வருந்தியவிடத்து, பெருங்குடியிலே நிலவும் அந் நிலைமைகள் எக்காலத்தும் பெருமை குன்றுவனவாகும் அல்லவோ! சொற்பொருள் : கொல்லை . புன்செய்ப் பகுதியாகிய தோட்டக்கர்ல்கள். கோவலர்-பசுநிரை மேய்ப்போர். குறும் புனம்.குறுகிய அளவுள்ள தினைப்புனம். குறுங்கால்-குறுகிய அடிமரத்தையுடைய. குரவு-குராமரம். ஆடுடை இடை மகன்-ஆடுகளை மேய்க்கின்றவகிைய இடைக்குலத்தான். அகலுள்-அகன்ற மனப்பகுதி. சீறுார்.சிற்றுார். வேறுபட்டு. தாயரும் ஆயருமாகிய பிறந்தகச் சூழலின்று வரைந்து கொண்டு, தன் மனையகத்தே வேறுபட்ட சூழ்நிலையிலே இருக்கச் செய்த நிலை. இரியின்-வருந்தின். - விளக்கம்: குரவு நெடுமரமன்று; குறுமரவகை சார்ந்தது என்பதல்ை குறுங்கால் குரவு'என்றனர். ஆடுடை இடையன் என்றது, ஆடுகளை உடைய இடையன் என்றும், களித்து ஆடுகின்ற ஆட்டத்தை உடையவனகிய இடையன் என்றும் பொருள்தரும். சிற்றுரே மாதலின்’ என்று கூறியது, யாம் ஒருவர்க்கொருவர் உதவுகின்ற கலந்துறை வாழ்விலே கூடியிருப்பவராவேம் என்றதாம். சிற்றுாருள் ஒருவர்க்கு வரும் இன்பதுன்பங்களை அனைவருமே கலந்து மகிழ்ந்தும் வருந்தியும் ஏற்பது இயல்பு. இரண்டாவது கூறிய துறைக்கு ஏற்பப் பொருள் கொள்ளுங் காலத்தே:- . வரைவிடை வைத்துப் பிரிந்தபோது, யாம் எம் சிற்றுாரின் கண்ணுள்ள எம் பெற்றேர் இல்லின் கண்ணே இருந்தேமாய் ஆற்றியிருந்தனம். நீர்தாம் நும்முயற்சியாலே இதுபோது மணவினைக்கு முயன்று வந்துள்ளீர். அனைத்தும் நும்மாலே ஆயிற்று. நும்மை மணந்து தும் இல்லம் புகுந்து இல்லறம் ஏற்கும் தலைவி, தும் பேரில்லத்தின் கண்ணும் நும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/146&oldid=774141" இலிருந்து மீள்விக்கப்பட்டது