பக்கம்:நற்றிணை-2.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றினை தெளிவுரை 221 காண்பதற்கு அமைந்த காலையில், தீவிய சொல்லும் செறிந்த தொடியும் விளங்குகின்ற வளையும் கொண்ட இளையோள்ாகிய தலைமகள், சிறிய தினைப் புனத்தேயுள்ள பரணிடத்தே நின்று, காவல் காத்திருக்கும் நிலைமையைக் காணும் பொருட்டாகத் தலைவன் வருதல்தான் இனி எவ்வாறு பொருந்துமோ? கருத்து : 'இனிக் களவுறவு வாயாது; கடிமணமே செய்தற்கு உரியது என்பதாம். சொற்பொருள் : குளிர் - குளிர் என்னும் கிளிகடி கருவி: தென்னை அல்லது பனைமட்ட்ையில் செய்வது இது. கொடிச்சி - குறவர் மகள்; கொடி போன்றவள். கொடுங்குரல் - வளைந்த தினைக்கதிர்; கொழுங்குரல் எனவும் பாடம். பொறை - சுமை, கோல்தலை - கோலின் தலைப்பகுதி; தண்டின் மேற்புறம். கடுப்ப போல. தெறு வ ர - பொலிவழிந்து வருத்தமுண்டாக்க, தோன்றும் எனவும் பாடம். தீஞ்சொல் - இனிக்கும் பேச்சு. : செறிதோட்டு', செறிதொடி என்றும் பர்டம். எல்வளைஒளியுள்ள வளைகள். குறு மகள் இளமகள். சிறுபுனம் - சிறிதான தினைப்புனம். புறநிலை - புறம் காக்கும் காவல் நிலை. பைதல் - துன்பம். விளக்கம் : புனத்தே தினைக்கதிர் கொய்யப் பெற்றது. ஆதலின், இனிப் பகற்குறி வாயாது என்பதும், கொடிச்சி செல்க' என்றதால் இனி இற்செறிப்பு நிகழ்தல் உறுதி என்பதும் உணர்த்தி, இனி இவளை வரைந்து மணந்தன்றி அடைதல் வாயாதுகாண்; அதன்பால் மனஞ்செலுத்துக என்றனள். தினை கொய்யப் பெற்ற புனமானது விழவொழி வியன்களம் போலத் தோன்றித் துன்பந்தரும் என்றது. அதன் முன்னைச் செழுமையையும், அதனிடத்தே அவளும் அவனுமாகக் கூடி மகிழ்ந்த இன்ப நினைவுகளையும் நினைவில் எழச் செய்து, அது தான் இனி வாயாமையினையும் உண்ர்த்தி, மனத்தை வருத்தும் என்றதாம். - "தந்தை வித்திய என்றது, புனங் கொய்தலைத் தள்ளிப் போடுவதும் போடாததும் தந்தையின் உரிமையன்றி மகளுரிமை அன்றென்பதற் காகலாம். பொலிவழிந்துபோய புனத்தைப் போலவே, நின்னை அடையமுடியாத பிரிவுப் பெருநோயினலே தலைவியும் பொலிவிழந்து வாடி வருந்துவள்; அவளைக் காத்தற்குரிய கடமையை ஆதலின், இனியும் களவையே நாடாது கடிமணம் பெற்றுப் பிரியாது வாழ்வதனைக் கருதுக என்பது குறிப்புப்பொருள் ஆகும், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/225&oldid=774228" இலிருந்து மீள்விக்கப்பட்டது