பக்கம்:நற்றிணை-2.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 223 - நம் மனையருகே வளைந்து படர்ந்துள்ள குடமுழாப்போலும் அடியையுடைய புன்னையினது, கரிய அடிமரத்தின் பின்னக மறைந்திருந்து, நாமும் சிறிதுபோது காணலாம்-வருவாயாக!. கருத்து: "அவன் தவருதே வருவான் என்று, தலைவியின் துயரத்தை மாற்ற முயல்கின்ருள் தோழி என்பதாம். சொற்பொருள் : கவர்பரி - விருப்பந்தரும் செலவுடைய குதிரை, கவர்வு விருப்பாகும்' என்பது தொல்காப்பியம். நெடுந்தேர் - நெடிதான தேர்; இது தலைவனது குடிப் பெருமை சுட்டியதாகும். பெயர்பட - பெயர்ந்து போவதற்கு. இளையர் - ஏவலிளைஞர் அன்றித் தேரின் வரவைக் கண்டு வழிவிட்டு ஒதுங்கிப்போகும் பரதவர் இளையர் என்றும் கருதலாம். கடலாடு விழாவிடை - கடலாட்டுப் பூணும் விழாவினிடத்தே; "கட்லாடு வியலிடை எனவும் பாடம்; வியலிடை - அகன்ற கடற்றுறையிடம். பேரணி - பெரிதான அழகு செய்யும் அணி வகைகள்: சிறப்பான அலங்காரங்கள். திதலை - தேமற் புள்ளிகள். வார்மணல். நெடிதாகப் பரந்துகிடக்கும் கடற் கரை மணற்பாங்கு. சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன். வாங்கிய - வளைந்த நிழற்பட ஓங்கிய என்றும் பாடம். முழவு முதல் - முழாப் போன்று பருத்த அடிமரப் பகுதி. மா. கரிய. பூவிரி கானல் - பூக்கள் மலிந்த கான்ற் சோலை. அரும் படர் - அரிய அவலநோய்; தீர்த்தற்கரிய கவலை. - விளக்கம் : புணர்குறி' என்றது, புணர்தற்காகச் சுட்டப் பெற்ற குறி இடம். இதனை இரவுக்குறிப் போதில் தலைவியே சுட்டுவாள் என்பது மரபு: களஞ் சுட்டுக் கிளவி கிழவியதாகும்' என்பது விதி (தொல். பொ. 126). இவ்வாறு கூறுவதன்மூல்ம், தலைவியின் துயரத்தைச்சிறிதுபொழுதுக்கு ஆற்றுவித்து, அவளே வீட்டிற்கு அழைத்தேக முற்படுகின்ருள் தோழி'என்றும் கருதுக. தலைவன் வருவான்' என்பது தோழியின் கற்பனைச் - செய்தியே யாதலும் அறிக.. . மேற்கோள்: (1) நாற்றமும் தோற்றமும்' என்னும் தொல்காப்பியச் சூத்திர உரையுள் (தொ. பெர். 112), நன்ன யம் பெற்றுழி நயம்புரி இடத்தினும் என வருமிடத்து, நயம்புரி இடத்தினும் என்றதனால், களவொழுக்கம் நிகழா நின்றுழிக் கூறும் கூற்றும் ஈண்டே கொள்க’ என்று கூறி, இச் செய்யுளைக் காட்டி, இது வருகின்ருன் எனக் கூறியது என்பர் ஆசிரியர் இளம்பூரணர்ை. - - حسي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/227&oldid=774230" இலிருந்து மீள்விக்கப்பட்டது