தலைவன் வினைத்தைாழிற் و همراه ه به ع . . . のrち・ちとキャ நற்றினே தெளிவுரை - - $47 'வெயிலும் கலந்த நிலை இது. நடுக்கஞ் செய்தல் - அச்சமுறும் படி செய்தல். நண்ணுவழி - அடைந்துள்ள வழியிடையே. மிசைதல் - உண்ணல். ஓங்கு மருப்பு - உயர்ந்த கொம்பு. பொறி - புள்ளி. அறியிடையிட்ட - அறிவதற்கேற்ப இடை யிடைப்பட்ட வேறு உணர்ந்து - மனம் வேறுபட்டதாகக் கருதி. என்றுழ் - வெயில். புன்தலை - புல்லிய தலை; இளமையின் அமைதி இது. - - விளக்கம் : "வேறு உணர்தல்' என்பதனை, அது தான் புலியோடும் பொருதல்ைத் தொடங்கிற்றே எனக் கருதி, அதனல் அதற்கு நேரும் ஊறுக்கு அஞ்சுதல். எதனையோ கருதிற்ருய்க் களிறு பிளிறவும், அதன் வரவு இடையீடுபடவும், பிடியான புலம்பலுற்ருற்போல, நம் தலைவியும், நும் கருத்தை உணரின் ஆற்ருளாய்க் கலுழ்வாள் என்பதாம். - இறைச்சிப் பொருள் ; களிறு வேருென்றனைக் கருதித் தாழ்த்தமையினை, அது புலியோடு பொருதும் போலும் என மாறுபாடாக உணர்ந்து, அதன் பிடியான புலம்பும் என்றனள். இது, தலைவியும், நும் பிரிவால், வழியிடை நுமக்கு ஏதம் நிகழுமோ எனக் கருதினளாய்ப் பெரிதும் வருந்தி நலிவடைவள் என்பதாம். இதனைக் கேட்டலுறும் தலைவன், தன் போக்கைக் கைவிடுவன்! தலைவியை அகன்று போதலை மறந்திருப்பன் என்பதாம். - பாடபேதம் : துறை : பிரிவுணர்த்தப்பட்ட தலைமகள், தோழிக்கு, நினைக்கலும் நினைத்திரோ வைய புன்றலை மடப்பிடி புலம்பிய குரலே என்பது சொல்லாமோ எனச் சொல்லியது எனவும் கூறப்படும். பயன் : மடப்பிடி புலம்பியது போலத் தலைவியும் குரலெடுத்துப் புலம்பிக்கூடத் தன் ஆற்ருமையைப் போக்க வியலவில்லையே என்பதாம். 319. மீன் துஞ்சு பொழுது பாடியவர் விண்த்தொழி சோரேஞர். திண: நெய்தல். துறை: காப்பு மிகுதிக்க்ண் ஆற்ருளுகிய தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது. ((து. ம்.) தலைவியின் களவொழுக்கத்தை அறிந்த தலைவி பின் தாய், தலைவியை இல்லிடைச் செறித்துக் கடும்ையான
பக்கம்:நற்றிணை-2.pdf/251
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை