பக்கம்:நற்றிணை-2.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"n৫০vanwe4%& روه كل عا .4 الورم خوك நற்றிணை தெளிவுரை طان1م م ته به دوو6و விளக்கும். ஆகவே, அவன் காவலையும் கடந்து அவள் சென் றனள் என்பது, அவளது கட்டுக் கடந்த பெருங்காதலை உணர்த் தும் என்பதாம். பயன் : தலைவன் தலைவியோடு தன்னுரர் சென்று மணந்து வாழ்வான் என்பதாம். 325. தகுமோ பெரும! பாடியவர்: மதுரைக் காருலவியங் கூத்தனர். திணை பாலை. துறை : தோழி செலவு அழுங்குவித்தது. ((து-வி.) பொருளீட்டி வருதலை நினைத்துத் தலைவியைப் பிரிந்து செல்லக் கருதுகின்ருன் த்லைவன். அவ்னை நெருங்கி, அவன் பிரிவைத் தலைவி பொறுத்து உயிர் வாழாள் எனக்கூறி, ஆவன் போவதைத் தடுத்து நிறுத்தத் தலைவியின் தோழி முயல் கின்ருள். அவள் க்றுவதாக அமைந்த் செய்யுள் இது) கவிதலை எண்கின் பருமயிர் ஏற்றை இரைதேர் வேட்கையின் இரவிற் போகி டுேசெயற் சிதலைத் தோடுபுனைந்து எடுத்த அரவாழ் புற்றம் ஒழிய ஒய்யென முரவாய் வள்ளுகிர் இடப்ப வாங்கும் 5 ஊக்கரும் கவலை நீந்தி மற்றிவள் - பூப்போல் உண்கண் புதுகலம் சிதைய வீங்குநீர் வாரக் கண்டும் தகுமோ பெரும தவிர்கநூம் செலவே! தெளிவுரை : பெருமானே! இவளுடைய குவளைமலர் போலும் மையுண்ட கண்களின் புதுமையான அழகு சிதைந்து போகுமாறு, மிகுதியான நீர் வடிதலைக் கண்டும், நீர் பிரிதல் என்பதுதான் தகுதியுடையதாகுமோ? நும் செலவினைத் தவிர் வீராக! கவிந்த தலையையுடைய கரடியினது, பருத்த மயிரைக் கொண்ட ஆணுனது, இரையைத் தேடிவரும் ஆசையாலே இரவு நேரத்தில் காட்டுட் செல்லும். நீடிய செயற்பாட்டையுடைய கரையான் கூட்டம் செய்து உயர்த்தியிருக்கும், பாம்புகள் வாழ்கின்ற புற்றிடத்தேயுள்ள அச் சிதலைகள் ஒழியுமாறு, விரைவாக, ஒடிந்த முகப்பையுடைய பெரிய நகங்களாலே பறித்து, உள்ளிருக்கும் புற்ருஞ்சோறு முதலாயவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/264&oldid=774271" இலிருந்து மீள்விக்கப்பட்டது