பக்கம்:நற்றிணை-2.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 321 வரிசையாக ஒழுங்குபடச் செல்வதைப் பார்ப்பவர்கள், அளத்து வெளியிலே விரைந்தோடும் ஆரவ்ார ஒலியைப்போல, நின் நட்பானது, இப்போது பெரும் அலராகின்றது. யாங்கள் அதை எவ்வாறு பொறுத்திருப்போமோ? . கருத்து : 'விரையவந்து மணந்து கொள்வாயாக என்ப தாம். சொற்பொருள் : ஆடரை - ஆடியபடியிருக்கும் அடிமரம். ஒழித்த - கழித்த். நீடிரும் பெண்ண்ை - நெடிய கரிய பன. கர்வ்ோலை காய்ந்துபோன ஒலை. சூழ் சிறை - சூழச் செறிக்கப் பெற்ற வேலி; சூழயாத்த சிறை என்று கொள்க. வார்மணல்வெண்மணல். முன்றில் முற்றம்; இல்லின் முன்பக்கம். எல்லிஇரவு. தூவல் சிதறும் துளிகள். சேர்ப்பு - கடற்கரைப் பகுதி. கல்விள்ை உப்பு - கல்லாக் விளைந்த உப்பு: நீர்ப்பசையற்ற உப்பு எனலும் ஆம். நெடுநெறி - நெடிய வழி. அளம் - உப்பளப் பகுதி. கெளவ்ை - பழிச்சொல். இறைச்சி : ஒலை சூழ் சிறை யாத்த கானல் என்றது, எமரும் எம் அன்னையும் எம் இல்லகத்தைப் பாதுகாத்தலே மேற்கொண்டனர்; ஆதலின் இனி இரவுக்குறி வாயாது என்று உணர்த்தியதாம். புன்னை அடி மரத்தில்ே தோணி இயக்க மின்றிக் கட்டிக் கிடப்பது போல, இனித் தலைவியும் புறம் போகாதவாறு இற்செறித்துக் கட்டுப்பாடுகள் செய்யப் பெறுவள் என்பதாம்; தூவல் போல நின் அன்புரைகளால் அவள் வாழ்வாள் என்பதுமாம். விளக்கம் : பனையோலையால் வேலியை மறைத்துக் கட்டு தலைக் கூறியது; புறத்தே நின்றும் பிறர் கண்டு மயங்காதபடி என்று கொள்க. வேலியைக் கற்பாகவும், பனையோலையால் மறைத்தலைத் தன்நம்பிக்கையால் காத்தலாகவும் கொள்ள லாம். உப்பு வண்டிகள் களத்தை நோக்கி வருவது கண்டு பரதவர்கள் களிப்போடு நெருக்கியடித்துச் செல்வதுபோல, நீ இவளைக் காண வந்துபோவதும் பலர்க்கும் சொல்விருந்தாகி ஆரவாரமாயிற்று என்பதாம். அவ்வாறே, நீ வரைந்துவந்த போது ஊரெல்லாம் மகிழ்வோடு ஆரவாரித்து மகிழ, உங்கள் திருமணமும் நிகழ்வத்ாயிற்று எ ன்று இரண்டாவது துறையோடு பொருத்திப் பொருள்கொள்க. கட்டுண்டு கிடக் கும் தோணி தூவலால் நனையும் என்பதுபோல, இற்செறித்து வருந்தியிருப்பினும், அலர் எழுவதல்ை அவள் மனம் நின்பால் நிலைத்திருக்கும் என்பதும் கொள்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/325&oldid=774410" இலிருந்து மீள்விக்கப்பட்டது