பக்கம்:நற்றிணை-2.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 333 முனியுடைக் கவளம் போல கனிபெரிது உற்றகின் விழுமம் உவப்பென் 10 மற்றுங் கூடும் மனமடி துயிலே. தெளிவுரை : பெருமானே! பலரும் பழித்துப் பேசுதற்கு நாணங்கெர்ண்டனையாய், வன்மையாக இரும்பு முள்ளாலே குத்திப் பாகர்கள் வருத்துதலினலே துதிக்கையிடத்தே வைத்த கவளத்தினை உண்ணுது, உடலின் மேல் எல்லாம் வாரி இறைக் கின்ற, சினத்துக்கு உட்பட்ட யானைக்கன்றது கவளத்தைப் போல, மிகப் பெரிதும் நீயும் அடைந்துள்ள சீர்மையைக்கண்டு யானும் உவப்படைவேன். மனையிடத்தே வந்து துயில்கின்ற இன்பமானது பிறிதொரு பொழுதும் நினக்குக் கைகூடுவதே யாகும். அதனுலே, முழவின் கண்ணிடத்தே வைத்த மார்ச்சனை யானது காய்ந்து போகும்படியாக, முறையோடு கூத்தினை ஆடிய விழாவானது ஒழிந்த களத்திடத்தேயுள்ள ஒரு பாவை யைப் போல, நேற்றுப்போதிலே நின்னைச் சேர்ந்தோரின் புதுவ தான அழகு நலத்தையெல்லாம் கொள்ளை கொண்டாயாய், இற்றை நாளிலே பாணல்ை கொண்டுதரப்படும் மகளிரது மென் மையான தோள்நலத்தைப் பெறும் பொருட்டாக, நீதான் விரைந்து போவாயாக! நின் பரத்தையும் நின்னலே நாளும் இன்பம் பெற்றுச் சிறப்பாளாக! கருத்து : நின் பரத்தையிடமே செல்க' என்பதாம். சொற்பொருள் : முழவு முகம் - முழவின்கண் அடித்து முழக்கும் கண் பகுதி. புலர்ந்து- காய்ந்து; காய்தல் முழக்குத லால். பாவை - கூத்தாடிய பெண். நெருநை - நேற்று. வெளவி - கவர்ந்து கொண்டு. சென்றி - சென்று வருக. வல்லேவலிமையாக, காழ் - தோட்டிமுள். கசிந்தவர்-பாகர். கலைப்பவருத்த முனி - யானைக்கன்று; முனியுடைக் கவளம் எனக் கொண்டு சினத்துக்குட்பட்ட கவளம் எனவும் கொள்ளலாம். மனமடி துயில் - மனைக்கண் பெறுகின்ற இனிய உறக்கம்; இது மனைவியோடு கலந்து மகிழும் இன்துயிலாகும். விளக்கம் : அவன் மனை வரவும்கூடப் பல்லோர் பழித்தற்கு - நாணியதனலே நிதழ்ந்ததன்றி, உண்மையான அன்பினலே ஏற்பட்டதன்று என்று இடித்துக்கூறிப் பழிக்கின்றனள். ப்ாகர் குத்துதலாலே வருத்தமுற்ற யானைக்கன்று உண்ண எடுத்த கவளத்தை உண்ணுது தன் மேலெல்லாம் வாரி இறைத்தாற் போல, நீயும் ஊரார் பழியாலே புண்பட்டு, நின் பாணஞ்லே தரப்பட்ட பரத்தையை நுகர்தலன்றிக் கைவிட்டனையாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/337&oldid=774434" இலிருந்து மீள்விக்கப்பட்டது