பக்கம்:நற்றிணை-2.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 359 காரரும்பு அவிழ்ந்த கணிவாய் வேங்கைப் பாவமை இதணம் ஏறிப் பாசினம் வணர்குரல் சிறுதினை கடியப் புணர்வது கொல்லோ, நாளையும் நமக்கே? தெளிவுரை : தோழி! இன்று நம் அன்னையும் நம்மை இற்செறிக்கக் கருதினள். முற்றத்துப் பலாமரத்திலேயுள்ள பழுத்த பழத்தைப் பிளந்து கிளறிப் புல்லிய தலையையுடைய மந்தியானது சுளைகளைத் தின்று கொட்டைகளைக் கீழே உதிர்க் கும். அயலிலே நின்ற கொடிச்சியானவள், தன் தந்தையது மேகந்தவழும் பெரிய மலையினது வளத்தைப் போற்றிப் பாடியவளாக, ஐவன வெண்ணெல்லைக் குத்தியபடியே இருப்பாள். அத்தகைய வளநாடன் தலைவன்! அவனேடு, அச்சத்தையுடைய மலையிடத்திலே அருவியாடிக், கருநிறத்தை யுடைய அரும்புகள் இதழவிழ்ந்து மலர்ந்த, சோதிடம் வல்லார் போன்ற வேங்கைமரத்திலேயுள்ள பரப்பமைந்த பரணிடத்தே ஏறி, வளைந்த கதிர்களையுடைய சிறுதினையைக் கவரவரும் பசிய கிளியினத்தைக் கடிந்து ஒட்டியபடி இருத்தலானது, நாளையும் நமக்குப் பொருந்துவதாகுமோ? ஆகாதே காண்! கருத்து : நாளைக்குத் தலைவனை நம்மாற் சந்திக்க முடியாது என்பதாம். சொற்பொருள் : முன்றில் - முற்றம். படுசுளை - நிறைந்த சுளைகள். மரீஇப் - கிளறிப் பிளந்து எடுத்து. தூர்ப்ப - உதிறு மாறு வீழ்த்த. மைபடு - மேகம் தவழும். மால் வரை - பெரிய மலை. கொடிச்சி - குறவர் மகள். ஐவன வெண்ணெல் - ஐவன மாகிய மலைவெண்ணெல். குறுஉம் - குற்றும். சூர் - அச்சம்; அணங்கும் ஆம். காரரும்பு - கருமையான அரும்பு. கணிவாய் - கணிபோன்று காலம் அறிவிப்பதான பாவமை - பரப்பமைந்த. இதணம் - பரண். பாசினம் - பசிய கிளியினம். வணர்குரல் - விளைவான தினைக்கதிர். புணர்வது - பொருந்துவது: கை கூடுவது. விளக்கம் : வேங்கை அரும்பவிழ்ந்து மலருங் கால்ம், கானவர் தினை கொய்தற்கு முற்படுகின்ற காலமாதலின், தினை கொய்யும் காலம் வந்ததென்று அறிவிக்கும் கணிபோன்று வேங்கை மலர்ந்தது என்றனள். வேங்கை மலருங்காலம் மணவினைக்கு உரிய காலமாதலின், இல்லத்தார் மகளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/363&oldid=774492" இலிருந்து மீள்விக்கப்பட்டது