பக்கம்:நற்றிணை-2.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 375 கடுங்கல் ஆளு. நெஞ்சமொடு, இடும்பை 5 யாங்கனங் தாங்குவென் மற்றே!-ஒங்குசெலல் கடும்பகட்டு யான நெடுமான் அஞ்சி ஈர நெஞ்சமோடு இசைசேண் விளங்கத் தேர்வீசு இருக்கை போல மாரி இரீஇ மான்றன்ருல் மழையே! 10 தெளிவுரை தலை நிமிர்ந்தவாய்ச் செல்லும் விரைந்த நடையையுடைய களிற்றியானைப் படையினையும், விரைவாகச் செல்லும் குதிரைப்படையையும் உடையவன் அஞ்சி என்பவன். அவன், குளிர்ந்த உள்ளத்தோடு, தன் புகழானது நெடுந்தொலை வுக்கும் சென்று விளங்குமாறு, தன் நாளோலக்கமாகிய அரசிருக் கையிடத்தே வந்து, இரப்பவருக்குத் தேர்களையே பரிசிலாக வீசு வான். அவனது நாளிருக்கைபோல மேகமானது நிலைத்திருந்து மழையையும் பெய்யத் தொடங்கியது "தாங்குவதற்கு அரிதான துயரினலே வருந்துதலால் உண்மையாகவே சாகும்' எனச் செத்தொழியாமையினலே, அவர்பால் அன்பில்லாதவளும் யான் அல்லேன். கரையைப் பொருதி ஒடுகின்ற காட்டாற்றின் இடிகரையிடத்தேயுள்ள, வேர்கள் எல்லாம் வெளிப்பட்டுத் தோன்றும் மாமரத்தின் அழகான தளிரைப்போல, நடுங்குதல் நீங்காத நெஞ்சத்தோடு, இந்தத் துன்பத்தையும் எவ்வாறு தாங்குவேனே? என்பதாம். கருத்து : இனியும் இத் துயரம் தாங்கேன் என்பதாம். சொற்பொருள்: உழத்தல் - உழன்று வருந்துதல். பெரும் பிறிது - சாக்காடு. இலேனும் - இல்லாதேனும்; இல்லாமற் போனது அன்பு. இகுகரை - இடிந்து கொண்டிருக்கும் கரை. மாஅத்து - மாமரத்தின். வேர்கிளர். வேர் பறிக்கப்பட்ட ஆன . நீங்காத இடும்பை - துன்பம், ஒங்கு செலல் - தலை யுயர்த்துச் செம்மாந்து நடத்தல். பகட்டுயானை - களிற்றியானை. நெடுமான் - விரையச் செல்லும் குதிரை, நெடுமான் அஞ்சி, பெயரும் ஆம். ஈரநெஞ்சம் இரக்கமுள்ள குளிர்ந்த நெஞ்சம். தேர்வீசு இருக்கை - தேர்களைப் பரிசாகத் தருவதைக் குறித்து அமர்ந்திருக்கும் பரிசில் இருக்கை. மாரி - மழை. விளக்கம் : மேகம் நிலையாக நின்று மழை பெய்வதற்கு, அஞ்சியின் வழங்குதல் வேண்டுமென்னும் ஈரநெஞ்சத்தோடு அம்ர்ந்திருக்கும் இருக்கையை உவமித்தது மிகவும் சிறப்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/379&oldid=774527" இலிருந்து மீள்விக்கப்பட்டது