பக்கம்:நற்றிணை-2.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 391 முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப்பல கன்பொன் இமைக்கும் நாடனெடு 10 அன்புறு காமம் அமையுகம் தொடர்பே ! தெளிவுரை : என் தந்தையும், களிற்றின் முகத்தைப் பிளந்த விற்ருெழில் அல்லது பிறதொழிலைக் கல்லாத, சிறந்த அம்புதொடுக்கும் ஆற்றலையுடைய ஏவல் மக்களாகிய வீரரோடு, விலங்கினங்களைப் பின்பற்றி வேட்டைமேற் சென்றனன். அதனலே, சிறு கிளிகள் கொய்தழிக்கும் பெரிய் கதிர்களையுடைய தினைப்புனத்தின் காவலும் நீதான் என்றனள் அன்னை. தன் சேவலோடு மலைப்பகுதியிலே சென்ற தான், கிளைக்கின்ற காலையுடைய கோழியானது, பழங்கொல்லை யின் மேற்புறத்தைக் கிளைத்தெழுப்பிய புழுதியானது, மிகப் பலவாகிய நல்ல பொன் துகள்போல ஒளி வீசுகின்ற மலைநாடன் நம் தலைவன்! அவனோடு அன்புமிகுந்த காமமே தலைக்கீடாக நாமும் தொடர்பு உடையவராயினேம். அங்ங்னம் ஏற்பட்ட நம் தொடர்ச்சியானது விரைவில் நீங்கும்படியாக, வேங்கை மரங்களும், புலிபோன்ற புள்ளியுள்ள பூக்களை ஈன்றன. அருவிகள் தேன்மணமிகுந்த நெடிய மலையிடத்தே நீலமணிபோலத் தோன்றுகின்றன. அன்னையும் அமர்ந்து நோக்கியவளாயினள். இல்லத்தார் மணவினைக்கு முயல் நேருமாதலால், நம் தொடர்பு எப்படித்தான் முடியுமோ? கருத்து விரைய வந்து தலைவன் வரைந்து கொள்ள வேண்டும்' என்பதாம். சொற்பொருள் : புலி - வேங்கை மலருக்கு உவமையாகு பெயர்: புள்ளிபெற்ற பூக்கள் என்பதல்ை இவ்வாறு கூறினர். தேம்படு நெடுவர்ை தேன் மிகுந்த நெடிய மல்ேத்த்ொடர். மணி - நீலமணி. அமர்ந்து நோக்கல் - ஒன்றை மனம் கருதித் தொடர்ந்து பார்த்தல், மா - விலங்கு, வழிப்படல் - துரத்திப் பின்செல்லல். முதை - பழங் கொல்லை. சுவல் - மேற்புறம். பூழி - புழுதி. அன்புறு காமம் - அன்புபொருந்திய காமவுறவு. இறைச்சி : சேவலோடு சென்ற கோழியானது கிளைத்து எழுப்பிய புழுதிமண்ணும் பொன்போலத் தோன்றும் நாடன் என்றது, அவன்ருன் வளமான குடியினன் ஆதலின், எமர் வேண்டும் வரைபொருளைத் தந்து விரைவிலேயே மணந்து கொண்டானில்லையே என்று வருந்திச் சொன்னதாம். z".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/395&oldid=774562" இலிருந்து மீள்விக்கப்பட்டது