பக்கம்:நற்றிணை-2.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய சான்ருேர்கள். (எண்-செய்யுள் எண்) அஞ்சில் ஆந்தையார் 233 - இவர் அஞ்சில் என்னும் ஊரினர். இவர் பெயர் ஆந்தை என்ப்து. ஐந்து இல் மட்டுமே முதலில் அமைந்த சிற்றார் அஞ்சில் ஊர் எனப் ப்ெர்பெற்றுப் பின்னர் ஊர் வளர்ந்த போதும் அதே பெயராகி நிலைப்ெற்று இருக்கலாம். இது குறிஞ்சித் திணைச் செய்யுள். கடுவன் நடுங்கக் குரங்குக் குட்டி மேகத் திடையிலே சென்று ஒளிக்கும் பெருங்கல் நாடன் என்பது நகைச்சுவை கனிந்த ஓவியமாகும். ஆன்ருேர் சென்ற நெறி பற்றியே வழுவாமற் சென்று ஒழுகும் பண்புடையோரே சான் ருேர் எனக் கூறும் அறிவுரை இன்றைக்கும் என்றைக்கும் பொருந்துவதாகும். அம்மூவர்ை 275, 307, 315, 327, 395,397 மூவன்! என்னும் இயற்பெயரை உடையவர் எனவும், சிறப்புக் கருதி 'அம் என்னும் அடைசேர்த்து வழங்கப் பெற்றவர் எனவும் கருதுவர். சேரன், பாண்டிய்ன், மலைய்மான் போன்ருேரால் ஆதரிக்கப்பெற்ற சிறப்பினர். தொண்டி, மாந்தை, கொற்கை, கோவலூர் ஆகியவற்றை வியந்து பாடியவர். ஐங்குறுநூற்றுள் நெய்தல்பற்றிய நூறு செய்யுட் களைச் செய்தவர். பிற தொகை நூல்களுள்ளும் இவர் பாடியவாக 27 செய்யுட்கள் காணப்பெறும். இந்நூலில் வரும் செய்யுட்களுள் 397-ஆம் செய்யுள் மட்டும் பாலையாகவும், மற்றைய நெய்தலாகவும் காணப்பெறும். நெய்தல் பற்றிய செய்யுட்களை மிகவும் செவ்விதாகச் செய்யும் புலமைத்திறம் மிகுந்தவர் இவர். இந்நூலின் 395-ஆம் செய்யுளில் குட்டுவனை யும் மாந்தை நகரத்தையும் இவர் சிறப்பித்துப் பாடியுள்ளனர். ‘சாவின் பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் மறக்குவேன் கொல், என் காதலன் எனவே அஞ்சுவல் எனத் தேம்பும் தலைவியின் கற்புள்ளச் சால்பினை 397-ஆம் செய்யுளிற் கண்டு போற்றலாம். மற்றைய பாடல்களும் நெய்தல் நிலத்தின் தன்மைகளையும். அந் நிலத்து மகளிரின் உளப்போக்கையும் ஓவியப்படுத்திக் காட்டுகின்ற சிறப்பின ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/423&oldid=774625" இலிருந்து மீள்விக்கப்பட்டது