பக்கம்:நற்றிணை-2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிக்ன தெளிவுர்ை 59 தெளிவுரை : மென்புலமாகிய நெய்தல் நிலத்தின் தலைவனே! இவள் நின்பாற் கொண்டுள்ள காமத்து மிகுதி யினலே, இதுதான் காலைப்பொழுதாயிற்றே எனவும் கருதாளாயினுள்! நீயுந்தான் இவள்பாற் கொண்டுள்ள நின் அன்பு பெரிதாக உடைமையினலே, இவளுக்குத் தலையளி செய்தலை விரும்பினையாய்ப் பகற்பொழுதின் கண்ணும் வருகின்றன! பலவாகிய பூக்களைக் கொண்டதான இக் கானற் சோலையிலே நீவிர் இருவீரும் இத்தன்மையராகின ராய்க் கூடியிருத்தல் எமக்கும் இனிதாகுவதே! எனினும், அயலவர் உரைக்கின்ற பழிச்சொற்களே காரணம்ாக, இவளும் வெளிவருதற்கரிதான காவலுக்கு இனி உட்படு பவள் ஆவாள்காண்! அதனலே, நீதான் இனிமேல் இரவுப் போதிலேயே வருவாயாக. ஆயின், சுரு:மீன்களின் கூட்ட மானது மிகுதியாயுள்ள நிறைந்த கடற்பரப்பினிடத்தும், அதனைச் சார்ந்துள்ள துறையினிடத்தும், உறங்காத கண்ணினராய்க் கூடியிருக்கும் கொடிய பெண்களையும், அம்பல் உரைத்தலே இயல்பாகவுடைய இவ்வூரும் உடைத் தாயிருப்பது. அதனையும் கருதுவாயாக! r சொற்பொருள் : பெருமையின்-பெரிதாக உடைமை யாலே. காலை - காலைப்பொழுது. அன்பு - காதலன்பு. அளித்தல்-அருளுதல்; தலையளி செய்தல், 'கானல்’ என்றது, கானற் சோலையினை. நீர்-தன்மை. அலர்-பழிச்சொல். கடி. காவல். எல்லி-இரவு. கலித்த-பெருகியுள்ள. அம்பல் ஊர். பழி கூறும் இயல்பினராகிய ஊரவர். - விளக்கம் வருதி என்றது வந்து திரும்புகின்றவனை நோக்கிச் சொல்லியது. இரவுக்குறி நேர்வாள்போல, "எல்லி வம்மோ என்றனள். அதுதான் இயலாமை கூறுவாள். கடற்பரப்பு சுறவினம் கலித்தது; ஆகலின் நினக்கு ஏதமாகு மென யாம் கவலையடைவோம் எனவும், துறையினும் துஞ்சாக் கண்ணரான பெண்டிரை இவ்வூர் உடையது ஆதலின், அலர் மேலும் பெரிதாவதற்கு அஞ்சுவோம் எனவும் குறிப்பாக உணர்த்துகின்ருள். இனிச் செயத்தக்கது இவளை நீதான் வரைந்துவந்து மணந்து கொள்ளுதலே என்பதனை இவ்வாறு உணர்த்தினள். இருவருமே ஒத்த காதலன்பை உடையவர் என்பதனைக் கூறினுள், பிரிவு நீட்டிப்பின் தலைவி ஆற்றியிராளாய் அலமருவாள் என்பதனையும் புலப்படுத் தினள். மெய்ப்பாடு, பெருமிதம்; பயன் வரைவு கடாதல், f

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/63&oldid=774752" இலிருந்து மீள்விக்கப்பட்டது