பக்கம்:நற்றிணை-2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 87 தான செய்கையும் அல்லவே! ஒரு சேர மயங்கி நின்று இடித்து முழக்கும் தொழிலையுடைய் தன்மையினலே, காட்டிடத்துப் பரவியுள்ள பாம்புகளின் ப்டம் மழுங்கிப் போகுமாறு செய்வாய். அஃதும் அல்லாமல், மாட்சிமைப் பட்ட, கனியாத நெஞ்சத்தவரான நம் தலைவரின் உள்ளத் தையும் கனியச் செய்வாயோ? அப்படிச் செய்யாமை யினலே, நின் இடியாற் பிறக்கும் முழக்கங்களும் எமக்கு இனிமையானவை ஆகா காண்! இவ்வாறு மேகத்தை நோக்கிப் புலம்புகிருள் தலைவி. சொற்பொருள் : வறம் - கோடை. கொல் - தாக்கி வருத்த. கார்ப்பருவத் தொடக்கத்தில் பிடவு மலரும் என் பதை, வண்டு வாய் திறப்பர்விண்ட பிடவம்' என்றனர். ‘பிடவுத் தளையவிழக் கார்ப்பெயல் செய்த காமரு மாலை” எனப் பிற சான்ருேரும் இதனைக் கூறுவர் (நற். 256). மால் . மயக்கம். புரைவது - ஒப்பது. மான்றுடன் - மயக்கத்துடன்; இது எங்கும் இருள் கவிதலால் உண்டாவது. விளக்கம் : அவரை வரத்தான் தந்திலை, அவர் நிலையை யேனும் நீதான் அறிந்து சொல்லவல்லாயோ என்ருல், அதுவு மில்லை. அவர் நெஞ்சைக் கனியப் பண்ணி உதவுவாய் என்ப் தும் இல்லை. என் நோயை மிகுதிப்படுத்தலே அன்றி, அது குறைதற்கான செயல் எதனையும் செய்யாமையின், நீதான் எனக்கு இனிய அல்லை என்கின்றனளும் ஆம். 'பிறர் நோயும் தம் நோய்போற் போற்றி அறனறிதல், சான்ருேர் கட்கெல்லாம் கடன் (கலி. 139) என்பது உலகியல் ஆதலின், அதனைப் பேணுத நின் செயல் சான்ருேர் செயலோடு ஒப்பாவதும் அன்று என்பதும் ஆம். குறித்த பருவத்து வாராது காலந்தாழ்த்தமையினலே, பாம்பினது நஞ்சுடைப் படத்தினுங் காட்டில் அவன் நெஞ்சம் கொடிதானது என்பாள், கனியா நெஞ்சத் தானும் என்கின்றனள் எனவும் கொள்க. நோய்க்கு நஞ்சு மருந்தாமாறு போல, நோய்ப்பட்ட அவளுக்கு. அவ்ன் நெஞ்சு மருந்தாகும் என்றதுமாம். நினக்குச் சால்பாவது, வினை கருதிச் சென்ற நம் காதலர் இருக்குமிடத்தும் சென்று முழக்கினையாய், நீர் தான். மீள்வதற்குக் குறித்த பருவம் வந்தது காண்பீர்? என்று அவர்க்கு அறிவுறுத்தலேயாகும் என்றதுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/89&oldid=774780" இலிருந்து மீள்விக்கப்பட்டது