இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. எல்லாம் அவளுக்கே
1
அவன் வருகின்றான். உள்ளிருப்பது வெளியில் தெரியாதபடி, அமைக்த தனி இடம் அது; மரம் அடர்ந்த நிழல் இடம். அவனை எதிர்பார்த்து நிற்கின்றாள் அவள். அவ்வளவு நம்பிக்கை !
எப்படி எழுந்தது இந்த நம்பிக்கை ? இந்த நம்பிக்கை உள்ளத்தில் எரிந்தெழுந்த எரிமலையின் ஆசவாரத்தை யார் அறிவார்? உள்ளத்தின் உள்ளே பார்த்தால் தோன்றும் ஒரு பழங் காட்சி......
2
அவர்கள் யாரோ இருவர் ! ஆனால், இயற்கையின் பொருத்தம்—கடவுளின் அருள்—அவர்கள் இருவரையும் ஒன்றுகொண்டு சேர்க்கின்றது. வியப்பினும் வியப்பு !
31