பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

"நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர்." நல்கார் என்று பேர் எடுத்துப் போய்விட்டார்; ஆனால் நம்மை நல்குபவர் என்று பெயர் எடுப்பார். நட்டவர் அல்லரா? நட்டல் என்பதன் பொருள் யாது? (நள், நடு, நள் + து, நட்பு) என்பவை ஒரே அடிச் சொல்லில் பிறந்தவை. வித்தினை நடுவது என்றால் என்ன? மண்ணில் அதனை நடுவாகச் செய்வது; ஒன்றாகும்படி மூடிவிடுவது; ஒன்றாய் இயைந்து வளரவிடுவது. "நட்டோர்; நண்பர்" என்றாலும் நம் உயிராம் நடுநிலையாய், நம்மால் மூடி மறைக்கப்பெற்று நம்மோடு இணைந்து ஒன்றாகித் தோன்றுபவர் என்று பொருளாம். (நட்ட விதை, தோன்றும்போதே விளங்கும்; அதுவரை மறைந்திருக்கும்.) "நம்பால் அவருக்கு உள்ள நட்பே அவரை இயக்குகின்றது. அவர் தோன்றுவர்; நமக்கென இயங்கியது அப்போது வெளியாக நம்மை நல்குவர்; தலையளி செய்வர். அவர் சென்றதும் நம் மணவாழ்க்கைக்குப் பொருள் தேடியன்றோ? பழி அவர்மேல் படாதபடி அவர் வாழ்வாராக!" என்று இயற்பட மொழிகின்றாள் தலைவி.

நாகரிகமாக—இறைச்சி வழியாக அல்லது மறைமுகமாகப் பழிதூற்றியதற்கும், மறைமுகமாகவே விடைகூறித் தலைவரை இயற்பட மொழிகின்றாள் தலைவி; “அலர் எழச்சென்றனராயினும், காடிறந்தார் நல்குவர்" என்று தோழி கூறியதனையே கொண்டுமொழிந்து தலைவன் பெருமை தோன்றப் பேசுகிறாள். தோழி கூற்றுக்கு விடையும் தலைவன் பெருமையும் மற்றொரு புனைந்துரையின் வழியே விளங்குகின்றன.

தலைவன், தமிழ்நாட்டினைக் கடந்து வேற்று நாட்டில் பொருள் ஈட்டச் சென்றுள்ளான். தமிழ் நாட்டின் வட

76