பக்கம்:நற்றிணை 1.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

115


கொய்பதம் குறுகும் காலை, எம்

குமார் ஓதி மாண்நலம் தொலைவே


10

வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்படி ஒன்று, சிங்கம் முதலாய விலங்குகளின் கூட்டம் நிரம்பியிருந்ததான் குன்றிடத்தே, ஓர் வேங்கை மரத்தடியிலே தன் கன்றோடும் தங்கியிருந்தது. அந்தப் பசு தூங்குகின்றதான தன்மையைக் கண்டு பஞ்சுபோன்ற தலையுடைய ஒரு மந்தியானது, கல் வென்று ஒலித்தபடியிருந்த தன் சுற்றத்தைக் கையமர்த்தி விட்டு, அந்தப் பசுவிடத்தே நெருங்கச் சென்றது. பால் நிரம்பிப் பருத்திருந்த அப் பசுவினது மடிக் காம்பினை அழுந்தும்படி பற்றி இழுத்து, இனிதான அந்தப் பாலினைத் தன் குலத்தொழிலையும் கற்றறியாத வலிய தன் குட்டியின் கைந்நிறையப் பிழிந்து தந்தது. அத் தன்மையுடைய பெரிய நாட்டைச் சார்ந்தவனே! சிவந்த தண்டினையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறுதினைப் பயிரையுடைய அகன்ற புனமானது, கதிர்கொய்யும் பருவத்தை நெருங்கும் காலத்தே, எம்முடைய கரிய ஈரிய கூந்தலை உடையவளின் மாட்சிமைப்பட்ட நலமானது கெட்டொழிவது உறுதியாகும். அதனை எண்ணியபோது, என் நெஞ்சமும் மருட்சியுடைய தாய் ஆகின்றதே!

கருத்து: 'அவள் இற்செறிக்கப்படுவாள்? அவள் நலமும் தொலைந்துபோம்; ஆகவே, அவளை வரைந்து மணந்து கொள்ளற்கு முனைவரியாசு' என்பதாம்.

சொற்பொருள்: தடங்கோடு - வளைந்த கொம்பு. ஆமான்-காட்டுப் பசு மடங்கல் - சிங்கம்; கூற்று. துஞ்சுபதம் தூங்கும் செவ்வி. துய் - பஞ்சு. ஞெமுங்க - அழுந்த.

விளக்கம் : 'கொடுங்குரல்' என்றது, தினைக் கதிர் முற்றியமை கூறியதாம். அதனாற் பகற்குறியும் வாயாது என்பதாம். 'கொய்பதம்' என்றது, தினைக் கதிர்களைக் கொய்து கொள்ளும் பருவத்தினை. 'அது நெருங்கத் தலைவி நலனழிதல்' அவள் இல்லிடத்தளாகித் தலைவனை பிரிந்து மெனிதலால் உண்டாவதாம்.

உள்ளுறை : 'துஞ்சு பதம் பெற்ற மந்தியானது; ஆமானின் பாவைக் கறந்து தன் குட்டிக்கு ஊட்டும் நாட' என்றது. தலைவியும் அவ்வாறே புதல்வனைப் பெற்று வாழும் இல்லற வாழ்வினை விரும்புகின்றனன்' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/116&oldid=1627238" இலிருந்து மீள்விக்கப்பட்டது