பக்கம்:நற்றிணை 1.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

நற்றிணை தெளிவுரை


58. குதிரைகள் துன்புறுக!

பாடியவர்: முதுகூற்றனார். திணை: நெய்தல். துறை: பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு நோக்கித் தோழி மாவின்மேல் வைத்துச் சொல்லியது.

தன்

((து-வி.) பகற்குறிக்கண் தலைவியைக் கூடியின்புற்றுத் ஊர்க்குத் திரும்பும் தலைவனிடம், தலைவியின் பிரிவாற்றாமையற்றிக் கூறுவாளான தோழி, 'இற்றைக்குத் தங்கிப் போக' என. அவனது தேரின் குதிரைகள்மேல் வைத்துச் சொல்லுகின்றாள் ]

பட்

பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர் சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின் கண்ணகத்து எழுதிய குரீஇப் போலக் கோல்கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோ வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின் வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக் கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந்து, நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன்

ஓடுதேர் நுண்நுகம் நுழைந்த மாவே!

5

10

வீரை வேண்மானான வெளியன் தித்தனது, முரசு முதலியவற்றோடு வெள்ளிய சங்குகளும் ஒலிமுழக்காநிற்க மாலைப்போதும் வரும் அவ்வேளையிவே, ஏற்றிக் கொள்ளப் பட்ட மாலை விளக்குகளின் ஒளியோடு, நுண்ணிய பனித்துளிகளும் அரும்பத் தொடங்கும். தலைவரைப் பிரிந்த தலைவியர் செயலறும்படியாக வந்த அந்த மாலைப் பொழுதோடு, உடல் சோர்வுற்றேமாய், அவலங்கொண்ட நெஞ்சினமாக, யாம் இவ்விடம்விட்டு இல்லத்திற்கு நீங்கிச் செல்வோம். உயர்ந்தெழும் அலைகளையுடைய நெடுங்கடற் பாங்கின் கண்ணுள்ள குனிர்ந்த கடற்றுறைத் தலைவனது. ஓடுகின்ற தேரின் நுண்ணிய நுகத்திற் பூட்டப்பெற்றுச் செல்லும் குதிரைகள் தாம்-

பெரிதான முதிர்ந்த செல்வத்தைப் பெற்றோரது பொன்னணிகளையுடைய புதல்வர்ன் பிறிதான தோளிலே கோத்துக்கொண்டு செல்லும், செவ்வையாக ஒலிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/117&oldid=1627239" இலிருந்து மீள்விக்கப்பட்டது