பக்கம்:நற்றிணை 1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

நற்றிணை தெளிவுரை


59. இனி வருந்தும்!

பாடியவர் : கபிலர். திணை: முல்லை. வினைமுற்றி மீள்வாள் தேர்ப்பாகற்கு உரைத்தது

துறை :

( (து-வி.) சென்ற வினையை முடித்துவிட்டு மீண்டு வருவானாகிய தலைவன்: தேரினை விரையச் சலுத்துமாறு தன் பாகற்குச் கூறியது இது.)

உடும்பு கொலீஇ வரிநுணல் அகழ்ந்து நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி எல்லுமுயல் எறிந்த வேட்டுவன், சுவல பல்வேறு பண்டத் தொடைமறந்து, இல்லத்து இருமடைக் கள்ளின் இன்களி செருக்கும்; வன்புலக் காட்டுநாட் டதுவே அன்புகலந்து நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை நு ண்முகை அவிழ்ந்த புறவின்

பொறைதலை மணந்தன்று; உயவுமார் இனியே.

10

டும்பினைக் கொன்று எடுத்துக்கொண்டும், மண்ணை

அகழ்ந்து வரிகளையுடைய தவளைகளைப் பிடித்துக் கொண்டும். நெடிய உச்சிகளையுடைய புற்றுக்களிலே தோண்டி அங்குள்ள ஈயலை வாரிக் கொண்டும். முயலினைக் கொன்று அதனைத் தூக்கிக்கொண்டும், தோள் மேலாகப் பல்வேறான இப்பண்டங்களைக் கொண்ட மூட்டையோடு, வேட்டுவன் ஒருவன் தன் வீடு சேர்வான். இல்லத்தில் இரவுப்போதிலே, அந்த மூட்டையை அறவே மறந்தவனாக, மிகுதியாகக் கள்ளைப் பருதியவனுமாக, அதன் இனிய கணிப்பிலேயே அவன் செருக்கியும் கிடப்பான். அத்தகைய வன்புலமாகிய -காட்டு நாட்டிடத்ததாக உள்ளது. அன்பு கவந்து நம்மிடத்தே விருப்புற்ற சோட்பாட்டினோடு, நெஞ்சத்து நம்மையே நினைந்தாளாயிருக்கும் தலைவியானவள் இருக்கின்ற ஊர். முல்லையின் நுண்ணிய அரும்புகள் பிணிப்பளிழ்ந்து மலர்ந்த புறவினிடத்ததாகிய அந்த ரிலிருந்தாளானாலும் அவளுள்ளம் பொறுத்தலையே மேற்கொண்டதாய் இருக் கும். இன்று மாலைக்குள் நாம் 'செல்லாவிடிலோ, அது தான் பெரிதும் வருந்தா நிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/119&oldid=1627241" இலிருந்து மீள்விக்கப்பட்டது