பக்கம்:நற்றிணை 1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

123


'அல்கல் வேணவா நலிய, வெய்ய உயிரா, ஏமான்பிணையின் வருந்திவெளாக' என்றது, பகற்குறி பெற்று இன்புறும் தலைவி, இரவு முற்றவும் தலைவளை நினைத்தபடியே பெரிதும் வருந்தியிருந்த நோய்மிகுதியை உணர்த்தியதாம். இதனால், இரவுக்குறி வேட்கின்றாளோ எனின், அதுவும். இன்றென்பாள். அன்னை தன்னுடைய நோயைக் குறிப்பாக அறிந்ததையும், அதுகுறித்து வினவியதையும் கூறினாள். களவுக்காலத்துச் சில நாள் வாராது போயின தலைவனது செயலை நினைந்து வருந்திக் கூறியதெனவும் கருதலாம்.

மேற்கோள் : இனி இச் செய்யுளைத் தலைவி தோழிக்குக் கூறுவதாகக் கொள்வர் நச்சினார்க்கினியர் (தொல்.பொருள். சூ. 111 உரை). இதனுள் 'துஞ்சாயோ' எனத் தாய் கூறியவழி மனைப்பட்டுக் கலங்கியவாறும். 'படர்ந்தோர்க்கு' என மறை உயிர்த்தவாறும், கண்படாக்கொடுமை செய்தானெனப் பரத்தமை கூறியவாறும் காண்க' எனவும் அவர் கூறுவர்.

62. எம் திங்கள்!

பாடியவர் : இளங்கீரனார்.
திணை : பாலை.
துறை : முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்துவந்த தலைவன்,

பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச், சொல்லிச் செலவழுங்குவித்தது.

[(து–வி.) பொருள்பாற் சென்ற தன் நெஞ்சிற்கு, முன்பு பிரிந்துசென்ற காலத்துத் தானுற்ற துயரத்தைக் கூறியவனாக, அந்த நினைவைக் கைவிடச் சொல்லுகின்றான், தலைவன் ஒருவன்]

வேய்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை
கந்துபிணி யானை அயாஉயிர்த் தன்ன
என்றூழ் நீடிய வேய்பயில் அழுவத்துக்
குன்றூர் மதியம் நோக்கி, நின்றுநினைந்து
உள்ளினென் அல்லெனோ, யானே—முள்ளெயிற்றுத் 5
திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்
எமதும் உண்டுஓர் மதிநாட் டிங்கள்
உரறுகுரல் வெவ்வளி எடுப்ப; நிழல்தப
உலவை ஆகிய மரத்த
கல்பிறங்கு உயர்மலை உம்பரஃது எனவே? 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/124&oldid=1677445" இலிருந்து மீள்விக்கப்பட்டது