பக்கம்:நற்றிணை 1.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

நற்றிணை தெளிவுரை


"தேனிறால்கள் எம்மருங்கும் தொங்கிக் கொண்டிருக்கும்; பெரிதான பழவகைகள். குலைகுலையாகப்பழுத்துக் கிடக்கும்; வெள்ளிய அருவியானது வரையிடத்திருந்து மாலைபோன்ற தோற்றத்தோடு இழிந்துவரும்; மலைத்தானியவகைகள் எல்வாம். கொள்வாரற்றுத் தனித்து வருந்தி உதிர்ந்து கிடக்கும்; இம்மலை பொருந்திய வெற்பிடம் எந்நாளும் இத்தகைய வளப்பத்தை உடையதாகும்." எனச் சொல்வாராக, அதனைப் பிரிந்து வேற்று நாட்டிற்குச் சென்றோர் இரங்கிப் புலம்புவார்கள்; அத்தகைய பெரிதான மலைநாட்டுத் தலைவனே! இனியாம் செல்லுகின்றோம் நீயும் செல்லுவதற்கு எழுவாயாக! நின் வாழ்நாளும் சிறப்புடையதாகுக! பக்கங்களை மறைத்துக் கிடக்கும் திருந்திய ஆபரணங்களை அணிந்தோள்; பணைத்த தோள்களையும், நுணுகிய இடையினையும், மெல்லிய சாயலையும் உடையோள்; இவ் இளமகள் இவளது பூண் தளர்ந்த மார்பகமானது, நாணமானது துன்புறுத்தலினாலே வருத்தமுற்றப் பழங்கண்ணாகிய மாமையினையும் உடையதாகும். முழக்கும் குரவையுடைய மணமுரசின் ஒலியைக் கேட்டறிவதற்கு முன்பாக, இவளது உயிர் இவளுடலிலேயே இருக்கும்படியான ஒரு குறிப்புத் தோன்றக் காணப்பெறுதலும் இனி அரிதாகும்!

கருத்து : 'கனவிடைப் பிரிவுக்கே பொறாத இவளை, விரைய வந்து மணந்து காப்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : மல்ல்ல் – வளம். மருங்கு – பக்கம். பழங்கண் – துன்பம். குறி எதிர்ப்பை – குறித்த எதிர்ப்பை; அறம் குறித்து வாங்கி, வாங்கியவாறே கொடுப்பது இது (குறள் 221). கூலம் – பதினாலுவகைத் தானியமும் ஆம். மயிர்க்கண் முரசம் – மயிர் சீவாத கோலாற் கட்டப் பெற்றிருக்கும் முரசம். இது மண முரசம்; பிற முரசங்கள் வீர முரசு, நியாய முரசு, தியாக முரசு போன்றவை.

விளக்கம் : 'பிரசம்' – தேனிறால்; மலையிடைத் தேனிறால்கள் தூங்கும் என்பதனைத் 'தும்பிசேர் கீரனார்' 'பிரசந் தூங்கும் மலைகிழவோற்கு" (குறு.392) எனக் கூறுவர். 'தென் தூங்கும் உயிர் சிமைய மலை' (மதுரை 3–4} எனவும், 'பிரசந் தூங்கும் சேட்சிமை வரையக வெற்பன்' (அகம் 242) எனவும் வரும். நம்மைப் பிரிவுத் துயரத்தால் நலியுமாறு வருத்தும் கொடுமையினையுடையரான அவரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/185&oldid=1685100" இலிருந்து மீள்விக்கப்பட்டது