பக்கம்:நற்றிணை 1.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

247


சொற்பொருள் : பைங்காய் – பசுங்காய். நல்ல இடம் – நல்ல மேலிடம். கருங்கனி – ஈந்தின் பழம் சுனிந்து திரைந்து தோன்றும் தன்மை. ஒருத்தல் – களிற்றுத் தலைவன், பனைக்கான்று – பனையை மோதிச் சாய்த்து. களரி – உப்புப் பூத்த பாழிடம்.

விளக்கம் : 'ஈந்தின் பசுங்காய் முதிர்ந்து செங்காயாகிப் பின் கனிந்து களிப்பட்டு உதிர்தலைப் போன்றே உடலது தன்மையும் முதிர்ந்து தளர்ந்து அழியும்' என, யாக்கையது நிலையாமை கூறினன். பொருள் வளமை சேர்ப்பதாயினும் காட்டது கடுமையும், காட்டிடை வந்துறும் கொடுமையும் இடைக்கண்ணும் யாக்கையை இழக்குமாறு செய்து, பொருளினைத் தேடவியலாதும், அதனாலே வந்தடையும் இன்பத்தை நுகரவிடாதும் இரண்டனையுமே அழிவுறச் செய்தலும் கூடும் என்பான், 'பொருள் தானும்தேடிப் பெறுவதற்கு அரிதாகும்' என உரைத்தனன் தனால் இளமையில் இன்புற்றுப் பருவநலத்தை நுகர்தலே தக்கதென்பானாய், பொருள் தேடிவரலிற் சென்ற தன் நெஞ்சத்து நினைவையும் நோகின்றான் என்று கொள்க.

ஒப்பு : 'வளமையான் ஆகும் பொருளிது என்பாய் இளமையும் காமமும் நின் பாணி நில்லா, என வரும் கலித்தொகை யடிகளும் (கலி: 12:11-2) இளமை நிலையாமையினை வலியுறுத்தும். ஆனால், 'இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்' எனக் குறுந்தொகை (குறு- 126:1) கூறுவது, சிலர், இவ்வாறு மனவுறுதியினராய்ச் செல்லுதற்குத் துணிவர் என்பதையும் காட்டும்.

127. வந்தால் பயனென்ன?

பாடியவர் : சீத்தலைச் சாத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : பாணற்குத் தோழி வாயின் மறுத்தது.

[(து–வி.) பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வருகின்றான் அவனது பாணன். அவனிடத்தே, தலைவி தலைவனை ஏற்பதற்கு விரும்புகின்றனள் என்பதனை இப்படித் தோழி உரைக்கின்றாள்]

இருங்கழி துழைஇய ஈர்ம்புற நாரை
இறஎறி திவலையின் பனிக்கும் பாக்கத்து
உவன்வரின் எவனோ? பாண! பேதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/248&oldid=1692331" இலிருந்து மீள்விக்கப்பட்டது