பக்கம்:நற்றிணை 1.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

309


விளக்கம் : இவள் மழைக்கண் காணா ஊங்கே நயனும்..... உடையேன்' என்றலின், கண்டதன்பின் உடையேனல்லன் என்றதுமாம், இவனையன்றிப் பிறர்பாற் பழகுதற்கு மனம் பொருந்தாமையின் நயன் அற்றான்; இவளது நட்பையன்றிப் பிறர் நட்பினை நாடாமையின் நண்பு அற்றான்; பெண்பால் இரத்தற்கும் துணிந்து தாழ்ந்தமையின் நாணம் இழந்தான்; பிறருக்காகவன்றி இவளுக்காகத் தன் உயிரையும் கொடுத்தற்குத் துணிந்தமையால் பயன் இவளென்றே கருதிப் பிற பயன்களை ஒதுக்கினான்; களவு உறவின் பழியுடைமை அறிந்தும் மேற்கொண்டானாதலின் பண்பு மறந்தான்; உலக வழக்கம் மணந்து வாழ்தலே என்றறிந்தும் அதனை மேற்கொள்ளாது களவிலே துய்க்கத் துணிதலின் பாடறிந்து ஒழுகுதலையும் கைவிட்டான்" என்று கொள்க.

மேற்கோள் : 'நிற்பவை நினைஇ நெகிழ்பவை உரைப்பினும்' என்னும் துறைக்குக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். களவியல். சூ.11. உரை மேற்கோள்). உலகத்து நிலைபேறாகக் கருதப்படுவனவாய் நற்குணங்களையும் காதலியைக் கண்ட போதிலேயே இழந்துவிடும் தலைவனது மனப்போக்கை இச் செய்யுள் காட்டுவதாகும்.

161. புள் அறிவித்தவோ?

பாடியவர் :...
திணை : முல்லை
துறை : வினைமுற்றிப் பெயரும் தலைவன், தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது.

[(து–வி) வேந்துவினைமேற் சென்றானாகிய தலைவன் அவ்வினையை முடித்தபின்னர் வீடு நோக்கி மீண்டும் வருங்காலத்தே. தேரினை விரையச் செலுத்துமாறு தோப்பாகனுக்கு உரைப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

இறையும் அருந்தொழில் முடித்தெனப் பொறைய
கண்போல் நீலம் சுனைதொறும் மலர
வீத்தர் வேங்கைய வியல்நெடும் புறவின்
இம்மென் பறவை ஈண்டுகிளை இரிய
நெடுந்தெரு அன்ன நேர்கொள் நெடுவழி 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/310&oldid=1694889" இலிருந்து மீள்விக்கப்பட்டது