பக்கம்:நற்றிணை 1.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

நற்றிணை தெளிவுரை


அதன்மேல் தன் குடிப்பெருமையை நினைத்தாளாய், அறத்தொடு நின்று, முறையாகத் தலைவனை மணவினை யால் அடைந்து வாழ்தலையே நாடினாள் என்பதனாலாம். 13. அழாதிருப்பாயாக! பாடியவர் : கபிலர். திணை : குறிஞ்சி. துறை : யற்கைப் புணர்ச்சியின் பிற்றைஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி. தலைவி, மறைத்தற்குச் சொல்லியது. [ (து -வி.) தலைவியின் மேனியிடத்துத் தோன்றிய மாறு பாடுகளைக் கண்டு ஐயுற்ற தோழி, இயற்கைப் புணர்ச் சிக்குப் பிற்றை நாளிலே, தலைவியிடம் அதுபற்றிக் கேட் கின்றாள். அவள், தன் களவை மறைத்துக் கூறத், தோழி யும் தான் அவளது ஒழுக்கத்தை அறிந்தமையினை மறைத்த வளாக, இப்படிக் குறிப்பாகக் கூறுகிறாள்.] எழாஅ யாகலின் எழில்நலந் தொலைய வழாஅ தீமோ நொதுமலர் தலையே ஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த பகழி யன்ன சேயரி மழைக்கண் நல்ல பெருந்தோ ளோயே! கொல்லன் எறிபொற் பிதிரின் சிறுபல் காய வேங்கை வீயுகும் ஓங்குமலைக் கட்சி மயிலறிபு அறியா மன்னோ; பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே! குள்றவர்கள், தினைப்புனத்தைக் காத்திருக்கும் புனத்தை மேய்ந்த விலங்கினைக் கொன்று வீழ்த்தியபின் பறித்துத் தம் கையிற்கொண்ட குருதிதோய்ந்த அம்பினைப்போல விளங்கும். செவ்வரி பரந்ததும் குளிர்ச்சி உடையதுமான கண்களையும், நன்றாகப் பெருத்த தோள் களையும் உடையவளே! கொல்லனது உலைக்கூடத்தே அடிக்கப்படும் இரும்பினின்றும் சிதறும் பொறியினைப் போலச், சிறுத்த பல காய்களையுடைய வேங்கையின் பூக்கள் உதிர்கின்ற, உயர்ந்த மலையிடத்துக் கூட்டிலிருக்கும் மயில்கள் அறிந்ததனை அறியாவண்ணம், பசிய புறத்தை யுடைய கிளிகள் நெருங்கிய தினைக்கதிர்களைக் கவர்ந்து போகின்றன. அதனைக் கண்டும், நீ அவற்றை ஓட்டுதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/33&oldid=1627155" இலிருந்து மீள்விக்கப்பட்டது