பக்கம்:நற்றிணை 1.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

நற்றிணை தெளிவுரை


நற்றிணை தெளிவு சிறப்பு : புல்லி, குட்டுவன், செம்பியன் ஆகியோரைப் பற்றிய செய்திகள். [(து. வி.) தலைவனின் பிரிவினைப் பொறாத தலைவி, துயருற்றுப் புலம்புகிறாள். அதனைக் கேட்ட தோழி. அவளைத் தேற்றுவாளாய்த் தலைவனை 'அன்பிலன்' எனப் பழிக்கின்றாள். அதனைப் பொறாத தலைவி, தலைவனது சால்பினைக் கூறுதலாக அமைந்தது இச்செய்யுள்.) தொல்கவின் தொலையத் தோள்நலம் சாஅய் நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர்; நட்டனர் வாழி! தோழி ! குட்டுவன் அகப்பா அழிய நூயிச் செம்பியன் பகல்தீ வேட்ட ஞாட்பினும் மிகப்பெரிது அலர்எழச் சென்றன ராயினும் மலர்கவிழ்ந்து மாமடல் அவிழ்ந்த காந்தளம் சாரல், இனம்சால் வயக்களிறு பாந்தட் பட்டெனத் துஞ்சாத் துயரத்து அஞ்சுபிடிப் பூசல் நெடுவரை விடரகத்து இயம்பும் கடுமான் புல்லிய காடிறந் தோரே. தோழீ! மலர் தலைகவிழ்ந்து, பெரிதான மடல்கள் விரிந்த காந்தட் பூக்களை உடையது மலைச்சாரல். அதனிடத்தே, தன் இனத்திற் சால்புடையதான வலிய களிறொன்று, பாம்பின் வாயிடத்தே பட்டது அதுகண்டு, தளராத துயரத்தோடு அச்சமற்றுக் கதறுகின்ற அதன் பிடியின் பேரொலியானது, நீண்ட மலையிடத்துள்ள பிளப்புக்களிடத்தே சென்று எதிரொலித்தபடியே இருக்கும். அத்தன்மை கொண்டதும், கடிதாகச் செல்லும் குதிரை யினையுடைய 'புல்லி' என்பானுக்கு உரியதுமாகிய வேங்கடமலைக் காட்டினைக் கடந்து, அதன் வடபாற் சென்றுள்ளவர் நம் காதலர். அவர், என் தோள் நலமனைத்தும் அழிந்துபோய், என் பழைய கவினும் நீங்கிப் போக, எனக்கு அருளாராய் என்னைக் கைவிட்டனர். அங்ஙனம் அவர் கைவிட்டனராகிக், குட்டுவனது அகப்பா என்னும் மதிலானது ஒருங்கே அழியும்படியாக இடித்தழித்து அற்றைப் பகற்போதிலேயே அந்நகரைத் தீயிட்டுக் கொளுத் திய சோழன்செய்த போரின் கடுமையைக் காட்டினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/35&oldid=1627157" இலிருந்து மீள்விக்கப்பட்டது