பக்கம்:நற்றிணை 1.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354

நற்றிணை தெளிவுரை


மடவை மன்ற கொண்க வயின்தோறு
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும்
நும்மில் புலம்பின் மாலையும் உடைத்தே
இனமீன் ஆர்ந்த வெண்குருகு மிதித்த
வறுநீர் நெய்தல் போல 10
வாழாள் ஆதல் சூழா தோயே.

கொண்கனே! தம் நாட்டிடத்தே விளைந்த வெள்ளை நெல்லைக் கொணர்ந்து தருவார்கள்; தந்து, அதற்குமாறாகப் பிறநாட்டிடத்தே விளையும் உப்பின் மிகுதியைக் கொண்டுபோய்த் தம் நாட்டிடத்தே விற்பார்கள்: நெடிய நெறியிலே வண்டிகளுடனே நிலவுக்காலத்திலே மணற்பாங்கான இடங்களைக் கடந்து செல்வார்கள். இவர்களைப் பிரிந்து அவ்விடத்தே இருப்பதை வெறுத்த சுற்றத்தோடும் கூடியவர்களாக வேற்றுப்புலத்திற்கும் போவார்கள்; உப்பு வாணிகர்கள். அவர்கள் அவ்வாறு தம் சுற்றத்தினை உடன்கொண்டு போகுதலும் அவர்க்கு இன்னாமையினை உடையதாகவே விளங்கும். இடங்கள்தோறும் மிகவும் இன்னாதாய் ஊதைக்காற்றும் வந்து வருத்துகின்றது; நின்னை உடனில்லாததனை உணர்கின்ற தனிமைத் துயரமும் பெருகுகின்றது; அவற்றுடன் மாலைக் காலமும் வந்து நலிவை மிகுதிப்படுத்துகின்றது. மீனினத்தை மிகுதியாகத் தின்ற வெளிய நாரையானது மிதித்துச் சிதைத்த நீரற்ற குளத்திடத்தேயுள்ள நெய்தல் மலரைப் போல, இவளும் நின்னைப் பிரிந்து இனி ஒரு கணப்பொழுதும் வாழமாட்டாள்; இவள் இவ்வாறாதலை ஆராய்ந்து காணாத நீயும், திண்ணமாக அறியாமை உடையை காண்!

கருத்து : 'நீ பிரிந்து போவதாயின் இவள் மனம் நலிந்து செத்து ஒழிவாள்' என்பதாம்.

சொற்பொருள் : வெண்ணெல் – வெள்ளைச் சம்பா நெல். 'பிறநாடு' என்றது நெய்தல் நிலத்தை. கொள்ளை – மிகுதி. சாற்றல் – விலைபகர்தல்; விற்றல் ஒழுகை – வண்டித் தொகுதிகள், ஒன்றன்பின் மற்றொன்றாச் செல்லும் முறைமை பற்றி 'ஒழுகை' என்றனர். நிலவு மணல் – நிலவனைய வெண்மணலும் ஆம்;

விளக்கம் : நீர் வற்றியதனால் அழிவை எதிர் நோக்கி நலிந்திருக்கின்ற நெய்தல் மலரினைக் குருகு மிதித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/355&oldid=1706387" இலிருந்து மீள்விக்கப்பட்டது