பக்கம்:நற்றிணை 1.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370

நற்றிணை தெளிவுரை


வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலர்ந்து கழனியிடத்தே தேனைச் சொரிதலைப் போன்று, தோழியும் தலைவிக்கு இனிமை சேர்ப்பாளாகித், தன்னைத் தலைவியுடன் கூட்டுவித்தற்கு முயலல் வேண்டும் என்று முதல் துறைக்கேற்பப் பொருள் கொள்ளலும் பொருந்தும்.

அழிசியின் ஆர்க்காட்டைக் கைக்கொள்ளல் எத்துணைக் கடினமோ அத் துணைக் கடினம் தலைவியைப் பெற்றுக் கூடுவதும் எனக் குறிப்பாகக் காட்டி, அவளது குடிப்பெருமையையும். அவள் தன்னால் அடைதற்கு அரியளாவள் என்பதனையும் உரைக்கின்றனள்.

'வலை மான் மழைக் கண்' என்றது, மருண்ட அவளது நோக்கத்தைக் கண்டு உனத்தகத்தே கொண்டதனாற் கூறியதாகும்.

'மகிழ்ந்தோய் நோ, இனி' என்றது. அவளை மறத்தற்கியலாத தன் நெஞ்சத்தினது தன்மையைக் கூறியதாம்.

'சின் மொழித் துவர்வாய் நகை' என்றது, தலைவியும் தன்மேற் கொண்ட காதலன்பை உடையவளாவள் என்று தான் அறிந்தமை கூறியதாகும்.

மூன்று துறைகட்கும் ஏற்பப் பொருளை இசைவித்துக் கண்டு இன்புறுக.

191. வறுந்தேர் போதல்!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்
துறை : தோழி தலைமகன் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது.

[(து–வி) தலைவியை வரைந்து மணந்து கொள்ளற்கு நினையாதானாய்க் களவின்பத்தையே உளங்கொண்டு வந்து போகும் தலைவனுக்குத் தலைவி இற்செறிக்கப்படுவாள் என்பதனை உணர்த்தி வரைவுக்குத் தூண்டுவாளான தோழி இவ்வாறு உரைக்கின்றாள்.]

'சிறுவீ ஞாழல் தேன்தோய் ஒள்ளிணர்
நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த
வண்டற் பாவை வனமுலை முற்றத்து
ஒண்பொறிச் சுணங்கின் ஐதுபடத் தாஅம்
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/371&oldid=1706913" இலிருந்து மீள்விக்கப்பட்டது