பக்கம்:நற்றிணை 1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

நற்றிணை தெளிவுரை


தோழி! விடியற்காலை வேளையிலே மழையான பெய்யத் தலைப்பட்ட நன்மையினையுடைய நெடிய குன்றத் தினின்றும், கருங்கடலின் அலையினைப்போல இழிகின்ற அருவி நீரானது, அகன்று பெரிதான காட்டினிடத்தே தங்கி யோடுகின்ற, அந்த அழகினை நோக்கினேன். அவரைக் கூடிய இடம் அதுவாகலின், அடக்கவும் அடக்கும் எல்லையுள் நில்லாவாய்ப் பேரழகினையுடைய குளிர்ந்த என் கண்கள் அழுதலைத் தொடங்கின அவற்றினின்றும் நீர் பெருகி வழியலாயிற்று. அதனைக்கண்ட அன்னையும், 'எதனால் அழுகின்றனையோ? அழாதே! நின் விளங்கும் எயிற்றிடத்தே யான் முத்தங் கொள்வேன்' என, மென்மையான இனிய சொற்களை என்பாற் கூறினாள். அதனைக் கேட்டதும் மிகவிரைவாக, உயிரினும் சிறந்ததாக நாம் பாதுகாக்கும் நாணத்தையும் அறவே நான் மறந்துவிட்டேன். 'மலைச் சாரலிடத்தே காந்தட் பூவினை ஊதித் தேனுண்ட கருநிற வண்டானது. இனிதாகத் தொடுத்தலையுடைய நரம்பினைப் போல ஒலிக்கா நிற்கும் வானோங்கிய வெற்பினுக்கு உரிய வனான வலைவனது மார்பினைப் பிரிந்தமையினாலே உண்டான தருத்தத்திற்கு அழுதேன்' என்று சொல்லு தற்கும் வாயெடுத்தேன். அவ்வளவில் நினைவு தெளியவும், அதனைச் சொல்லாது யானும் நேற்றுப் பிழைத்தேன். கருத்து: 'என் களவுறவை அன்னையும் அறிந்தமையால் இனி இப்படிப் பகலில் வந்து சந்திப்பது இயலாது; அதனால் அவரை மணந்துகொள்ளல் வேண்டும்' என்பதாம். சொற்பொருள் : நாள் மழை - விடியலிற் பெய்த மழை. மால் கடல் - கருங்கடல். அல்கல் - தங்குதல். நீர் சுழல்பு நீரைப் பெருக்கி. எயிறு உணகு - முத்தமிடுவேன். காந்தள் - காந்தட்பூ. மணிநிறம் - கருநிறம். நரம்பு - யாழ் நரம்பு. விளக்கம்: 'மார்பு அணங்கு' என்றது, மார்பைத் தழுவும் நினைவால் எழுந்த வருத்தத்தை. பிரிவிடத்துத் தாம் முன்னர்க் கூடியிருந்த இடத்தைக் கண்டதும், நினைவு கள் பலவும் அணியணியாக மேலெழ இப்படித் தலைவி வருந்துதல் இயல்பாகும் என்று கொள்க. இறைச்சி : 'காந்தளை ஊதித் தேனுண்ட தும்பி. அடுத்துப் பிற பூக்களை நாடிச் செல்லாது. அதனையே சுற்றி நின்று முரலும் மலைநாடனாயிருந்தும், நம்மைக் கூடியபின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/41&oldid=1627163" இலிருந்து மீள்விக்கப்பட்டது