பக்கம்:நற்றிணை 1.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இந்நூலின் செய்யுட்கள் தொகுக்கப்பெற்றுள்ளன. தாகுப்பாளர்களின் மதிப்பீட்டில் செறிவானவாகத் தோன்றிய செய்யுட்கள் மட்டுமே தொகுக்கப்பெற்றுள்ளன என்பதனையும் காட்டும். ஒவ்வொரு தொகை இவன் என, அத் தொகுப்பிற்குத் தேவையான நூலினையும் தொகுப்பித்தான்' பொருள் மற்றும் உதவிகளைச் செய்த அரசனின் பெயர் காணப்படும். அவன் துணையோடு தொகுத்துத்தந்த தமிழ்ச்சான்றோரின் பெயரும் காணப்படும். தொகுப்பித்தவன் பாண்டியன் பன்னாடு தந்தான் மாறன் இவ்வகையில், நற்றிணையைத் வழுதி எனக் காண்கின்றோம். 'பன்னாடு தந்தான்' என்னும் சிறப்புப்பெயர் இவனுடைய மறமாண்பைக் காட்டுவது ஆகும். இவன் செய்தனவாகக் காணப்படும் நற்றிணை குறுந்தொகைப் பாடல்கள் (நற்.97, 301; குறு. 270) இவனுடைய தமிழ்ப்புலமைப் பேராற்றலையும் நமக்குக் காட்டுகின்றன. இந்நூலைத் தொகுப்பித்தார் பெயரைப் பற்றிய குறிப்பேதும் காணப்பெறவில்லை. தொகுப்பின் செவ்வி யைக் காணும்போது அவரும் அகப்பொருட் செய்யுட்களை ஆக்குவதில் பெரும்புலமையாளராக இருந்திருக்கவேண்டும் என்றே கருதலாம். இந் நற்றிணையின் நயத்தை, நாட்டினர் அறிந்து இன்புறுவதற்கு உதவியவர், பல ஆண்டுகளாக முயன்று உழைத்து அருமையான மொழிப்புரையினையும் வகுத்து வெளியிட்ட பெரும்புலவர், பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் அவர்களாவர் ' (1862-1914). அய்யரவர்கள் திருமறைக்காட்டிலிருந்த மாபெரும் புலவரான திரு. பொன்னம்பலம் பிள்ளையவர்களின் மாணாக்கருள் ஒருவரும் ஆவர். முதன் இதன்பின், இவ்வுரையைப் பதவுரையாக்கியும், வேறு பல கருத்து விளக்கங்களைத் தந்தும் அமைந்த பெருமழைப் திரு. சோமசுந்தரனாரின் உரைப்பதிப்பு புலவர் வந்துள்ளது. வெளி தமிழ் மேதையான சித்தாந்த கலாநிதி ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்களின் விரிவான ஆராய்ச்சியுரைப் பதிப்பும் வெளிவந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/5&oldid=1627114" இலிருந்து மீள்விக்கப்பட்டது