நற்றிணை தெளிவுரை
53
மேற்கோள்: 'வடுவறு சிறப்பின் கற்பிலே திரியாமை' க்கு தனை மேற்கோளாகக் கொண்டு, 'இது செய்தனை எனத் தலைவி உவந்து கூறியது' என்பர் நச்சினார்க்கினியர். (தொல். பொருள் சூ. 147 உரை மேற்கோள்).
25. பண்பற்ற செய்தி!
குறிஞ்சி.
பாடியவர் : பேரிசாத்தனார். 600 GOOT : துறை : தலைமகளைத் தோழி குறைநயப்புக் கூறியது. [(து-வி.) தலைவன், தோழியின் உதவியைப் பெற்றுத் தலைவியைக் கூடுதற்கு முயல்கின்றான். அவனுக்கு உதவுவ தற்கு விரும்பிய தோழி, தலைவியிடத்தே சென்று, தான் அவனை விரும்பினாற்போலப் படைத்துக் கூறுகின்றாள். தோழியின் பேச்சிலே பொதிந்திருந்த கருத்தை உணர்ந்த தலைவி, தானும் தலைவனை விரும்புகின்றவ ளாகின்றாள் ] அவ்வளை வெரிநின் அரக்குஈர்த் தன்ன செவ்வரி இதழ சேண்நாறு பிடவின் நறுந்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப்
பொன்உரை கல்லின் நன்னிறம் பெறூஉம்
வளமலை நாடன் நெருநல் நம்மொடு
கிளைமலி சிறுதினைக் கிளிகடிந்து அசை இச்
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது
அல்லல் அன்றது காதலம் தோழி!
தாதுண் வேட்கையின் போதுதெரிந்து ஊதா
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி
5
10
கண்டும், கழல்தொடி வலித்தவென்
பண்பில் செய்தி நினைப்பா கின்றே!
அன்பினை உடையாளான தோழியே! அழகான சங்
கினது முதுகிலே செவ்வரக்கைத் தீற்றினாற்போலத் தோன்றும், சிவந்த வரிகளைப் பொருந்திய இதழ்களை யுடைய பிடவமலர்களின் மணமானது. நெடுந்தொலை வுக்கும் கமழ்ந்துகொண்டிருக்கும். அம் மலர்களிற் புகுந்து, அவற்றின் நறிய தாதுக்களிலே அளைந்தாடிய வண்டானது, பசுமை நிறத்தைக் கொண்ட பொன்னின் மாற்றை உரைத்துக் கூறுதற்குரிய உரைகல்லினது நல்ல நிறத்தைப் பெற்றிருக்கும். அத்தகைய வளத்தைக் கொண்ட நல்ல நாட்டிற்கு உரியவன்