பக்கம்:நற்றிணை 1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

நற்றிணை தெளிவுரை


அவள்


என் மகளை அணைத்தபடியே படுத்திருந்த யான், தொய்யில் வனைந்து பருத்த இளையதான அவளுடைய கொங்கைகள் நோவுகொள்ளுமோ' எனக் கருதினவளாக, அவளை அணைத்திருந்த என் கையைச் சிறிதே நெகிழ்த் தேன். அவ்வளவிற்கே, தான் தன்னுடைய பெரிதும் அமர்த்த குளிர்ச்சிகொண்ட கண்கள் ஈரங்கொண்டவாய்க் கலங்க, சுடுமூச்சு எறிந்தனள். மென்மையும் கருமையும் கொண்ட ஈரிய கூந்தலையும், பெரிதான மடப்பமென்னும் தகைமையையும் உடையவள் அத்தகைய என் மகள். அவள் தான், வேனிற்பருவம் ஒன்றே நிலைபெற்றதனால் காய்ந்து வாடிய காந்தட்பூக்களையும், அழலைப்போல ஒளி பரப்பு கின்ற வெம்மையான தன்மையையுமுடைய நெடிதான பாலை வழியிலே வழியிலே, இதுகாலைச் சென்றனள். நிழலுள்ள ஓர் இடத்தையேனும் பெறாததாய்க், குட்டிகளைப் பெற்றுக் காட்டிலே காவல் காத்திருக்கும் பெண்புலியானது பசியுற்ற தென்று: அதனைப் போக்கக்கருதியே ஆண்புவியானது மயங்கிய மாலைப்பொழுதிலே, வழியே வருவாரைக் கொல்லும் பொருட்டாக வழியை நோக்கியபடியே பதுங்கி யிருக்கும். புல்லிய அதராகிய சிறிதான அந்நெறியிலே, அவள்தான், யாங்ஙனம் நடந்து செல்லுவதற்கும் வல்லவ

ளாவாளோ?

கருத்து: 'அவள் நலமாகப் போய்ச் சேர்தல் வேண்டும். என்பதாம்.

சொற்பொருள்: உலந்த - வாடிய, மான்ற மாலை மயங்கிய மாலை; மயக்கம் கதிரொளிகுன்றல். அதர் - வழி. ஈரிய - ஈரத்தன்மையுடைய கான் மடிந்த - காலோய்ந்த

எனினும் ஆகும்.

ர்

விளக்கம்: 'நின்ற வேனில், உலந்த காந்தள், : அழல் அவிர் நீளிடை' என்பவையெல்லாம் பாலைவழியின் கொடு மையைக் கூறுவன. 'புல்லதர்ச் சிறுநெறி என்பதனைப் பரலும் முள்ளும் நிரம்பிக் கிடப்பதான் சிறிதான வழி, எனவும் கொள்வர். 'அணைத்திருந்த தன் கையை நெகிழ்க் கவும் தலைவி கலங்கி அழுதலைத் தொடங்கினள் என்றது, அவளது மென்மைத் தன்மையினை நினைந்து கலங்கிக் கூறிய

தாகும்.

(1) 'பிணவு இறைச்சிகள் : வழங்குநர்ச் செகீஇய வழிபார்த்து

பசி கூர்ந்தெனப் புலி றையும் நெறி என்றனள்; அங்ஙனமே, தலைவனும் தன் மகளைப் பேணிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/61&oldid=1627183" இலிருந்து மீள்விக்கப்பட்டது