பக்கம்:நற்றிணை 1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

நற்றிணை தெளிவுரை


அவனது

பக்க இசையாகக் கொண்டு அவர் ஆடிக்கொண்டிருக்கும் அத்தகைய நாட்டையுடையவன் எம் தலைவன். மார்பைத் தழுவிப் பிரிந்ததன் காரணமாக, அந்நினைவு தருதலாலே வந்தது, பசலை மிகுதியாகப் படர்தலைக் கொண்டதான், நீங்குதற்கரிய இக் காமநோய். இது நின்னாலே வருத்திக் கொடுக்கப்பட்ட நோயன்று என்பதனை நீயும் அறிவாய். அறிந்தும், தலை நிமிர்ந்து, கார்காலத்தே மலர்கின்ற கடப்பமலரின் மாலையைச் சூடியவனாக வெறியாடும் வேலனானவன் நின்னைக் குறித்து வேண்டவும் நீயும் வெறியயரும் எம் மனையிடத்தே வந்து தோன்றினை! அங்ஙனம் வந்த நீதான். யாம் போற்றிப் பரவும் கடவுளே யாயினும் ஆகுக! திண்ணமாக, நீயும் அறியாமை உடையை

காண்!

கருத்து : முருகே! இவளை இவள் தலைவனோடு விரைவிலே மணம்பெற்று இன்புறுதற்கு உதவினையானால், இவளது நோய் தானே தீரும்' என்பதாம்.

சொற்பொருள்: கடவுட் கற்சுனை - கடவுட்டன்மை யுடைய மலையிடத்துக் கற்பாங்கானவிடத்தே அமைந் திருக்கும் சுனை. கடவுட்டன்மையாவது. சூரரமகளிரன்றிப் பிற மானுட மகளிர் சென்று நீராடியும் மலர்கொய்தும் பயன்படுத்தாத தன்மை. குருதி ஒன்பூ - இரத்தச் சிவப்பு நிறம் ஒளிரும் செங்காந்தட்பூ; இது முருகனுக்கு உரியதாத லின் இதனை மானுட மகளிர் சூடார். சூர்மகள் - சூரர மகளிர்: முருகனுக்குப் பணிபூண்ட தேவகன்னியர்: 'குறமகள்' என்றும் பாடம். அப்போது முருகை மேற் கொண்டு வெறியயரும் கன்னியரான குறவர் மகளிர் என்க.

விளக்கம்: தலைவனோடு மணவிழா நேர்தற்கு அருளிச் செய்து தலைவியின் துயரைப் போக்காத முருகன் அணங்கிய நோய்' என வெறியாடும் வேலன் அழைக்க வந்தானாயின், அவன் மடவன்' என்கின்றாள் தோழி. இதனைச் செவிலி கேட்கத் தோழி கூறச், செவிலி நற்றா யொடும் சொல்ல, அவள் விரைவிலே தன் மகளுக்கு அவள் விரும்பிய காதலனையே மணஞ்செய்விக்கும் முயற்சிகளை நாடி முயல்வாளென்பது மரபாகும்.

இறைச்சி : ‘சூரரமகள் அருவியையே இன்னிசையாகக் கொண்டு முருகைப் போற்றி வெற்பகம் பொலிவுபெற ஆடிக் களிக்குமாறு போலத், தலைமகளும் தன் தலைவனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/71&oldid=1627193" இலிருந்து மீள்விக்கப்பட்டது